states

img

கட்டுமான தொழிலாளர் சங்க புதிய அலுவலகம் திறப்பு

மதுரை, ஜூன். 12- மதுரை மாவட்ட கட்டிடத்தொழி லாளர் சங்கத்தின் வடக்குப் பகுதிக்குழு அமைப்பு கூட்டம் மற்றும் புதிய சங்க  கட்டிட திறப்பு விழா ஜூன் 12 ஞாயி றன்று என். ஜாகீர் உசேன் தலைமை யில் நடைபெற்றது  அமைப்புக் கொடியினை மாவட்டத் தலைவர் ஏ. ராஜேந்திரான் ஏற்றிவைத்தார், சங்க கட்டிடத்தை மாவட்டச் செயலாளர் சி. சுப்பையா திறந்து வைத்தார் . பின்னர் நடைபெற்ற வடக்கு பகுதி அமைப்பு கூட்டதிற்க்கு எஸ் சங்கர் முன்னிலை வகித்தார். ஆர்.  முருகன் வரவேற்று பேசினார். பகுதிக்  குழு தலைவராக எஸ். சங்கர், செய லாளராக என். ஜாகீர் உசேன், பொருளா ளராக கே.சதீஷ் உள்ளிட்ட 15 பேர்  நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், பகுதிக்குழு செயலாளர் ஏ. பாலு ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டத் தலைவர் மா.கணேசன், துணைத் தலை வர் இரா. லெனின், கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் ஜா. நர சிம்மன், மாவட்டக்குழு உறுப்பினர் கே.  அலாவுதீன் சங்கத்தின் மாநில பொரு ளாளர் ஜே. லூர்துரூபி,கட்டுமான சங்க மாவட்ட நிர்வாகி கோட்டைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.