states

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மகாராஷ்டிரா மாநில த்தில் நடைபெற விருக்கும் காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்று மை யாத்திரையில் சிவ சேனா (உத்தவ் பாலா சாகேப் தாக்கரே) தரப்பி லிருந்து ஆதித்ய தாக்கரே  பங்கேற்க வாய்ப்புள்ளது என  அக்கட்சியின் முக்கிய தலைவர் அஹிர் கருத்து தெரிவித்துள் ளார்.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே  கொலைக் குற்றச்சாட்டி ற்கு ஆளாகியவர்தான். அக்கட்சியின் பல எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். ஆனால் தண்டனை பெறும் வரை யாரும் குற்றவாளிகள் அல்ல என  கருதுகின்றனர் என கர்நா டக முன்னாள் முதல்வர் சித்த ராமையா கூறியுள்ளார்.

தெலுங்கானா மாநிலம்  கம்மம் அரசு மருத்துவ மனையில் இறந்த மக ளின் உடலை வீட்டிற்கு கொண்டு செல்ல பணம் இல்லாததால் பெற்றோர்கள் தனது உறவினர் ஒருவர் மூலம் 50 கிமீ தூரம் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றனர்.

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் டெங்கு பாதிப்பு காரணமாக கர்பி  அங்லாங் மாவட்ட பகுதி களில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளும் ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோயமுத்தூர் மாநகரில் கொலை, கொள்ளை, துப்பாக்கிச்சூடு, வெடி பொருள் உள்ளிட்ட அனைத்து வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு புலனாய்வு குழு அமைக் கப்பட்டுள்ளது என உயர் நீதிமன்ற மதுரைகிளை யில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

மும்பை விமான நிலை யத்தில் வெளிநாட்டு பயணி ஒருவரிடம் இருந்து சர்வதேச சந்தை யில் ரூ.18 கோடி மதிப் புள்ள 6 கிலோ ஹெரா யின் போதைப்பொரு ளை மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) பறிமுதல் செய்தது.

மேற்கு வங்க சட்டப்பேர வையின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 30-ஆம் தேதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் செவ்ரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், 8  வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட விவகாரத்தில் 65  வயது ஆசிரியர்  போக்ஸோ  பிரிவுகளின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளார்.

அசாம் மாநிலத்தின் இந்திய-பூடான் எல்லை யில் நிகழ்ந்த சாலை விபத்தில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நவம்பர் 20-ஆம் தேதியன்று நேபாள நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. அனைத்துக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்கள் பட்டியல்களை இறுதிப்படுத்திவிட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (ஒன்றுபட்ட மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தனது பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. தங்களுக்குப் பெரும் ஆதரவுள்ள பகுதியான டர்சுலா மாவட்டத்திலிருந்து தொடங்கிய இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஓலி உரையாற்றினார்.

சீனாவுடனான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது அவசியம் என்றும் ஜெர்மனியின் ஜனாதிபதியான ஓலஃப் ஸ்கோல்ட்ஸ் கோரியுள்ளார். சீன பயணம் மேற்கொண்டுள்ள அவர் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கைச் சந்தித்துப் பேசியபோதே இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின்  20-ஆவது தேசிய மாநாடு நிறைவு பெற்ற பிறகு அந்நாட்டிற்கு பயணம் மேற்கொ ள்ளும் முதல் ஐரோப்பியத் தலைவர் ஸ்கோல்ட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டா, போலியோ ஒழிப்பில் முழுக்கவனம் செலுத்தி வருகிறது. ஐந்து வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்கு நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் முதல் சுற்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தற்போது இரண்டாவது சுற்றைத் தொடங்கியுள்ளனர். நவம்பர் 10-ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்தச் சுற்றில் 87 லட்சம் குழந்தைகளுக்கு வீடு, வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கப் போகிறார்கள். இதற்காக 73 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.