சென்னை, ஜன.20- தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசியலமைப்பு சட்டத் துக்கு எதிராக செயல்பட்டு வருவதை கண்டித்து காங்கி ரஸ் சார்பில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட் டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி,“ இது ரவி என்ற தனி மனிதனுக்கு எதிரான போராட்டம் இல்லை. அவர் மையப்படுத்தும் ஆர்எஸ்எஸ்,பாஜக, சனா தன தர்மம் என்ற பழமை வாதம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டம்” என்றார். காங்கிரஸ் கட்சி பழமை வாதத்துக்கு எதிரானது. எந்த மதத்துக்கும் ஆதரவா னது இல்லை.எதிரான வர்களும் இல்லை. எங்க ளுக்கும் மத உணர்வு உண்டு. ஆனால் மத வெறி இல்லை என்றும் அவர் கூறினார். ஆளுநர் அரசிய லமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வரு கிறார். அவர் இந்திய அர சின் பிரதிநிதி. ஆர்எஸ்எஸ், பாஜக பிரதிநிதிபோல ஆளுநர் பேசக்கூடாது. பாஜக, ஆர்எஸ்எஸ் சொல் லித் தருவதை அப்படியே செயல்படுத்தும் மாண வராக ஆளுநர் உள்ளார் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிரு ஷ்ணமூர்த்தி, ஆ.கோ பண்ணா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று அனைத்து மாவட்ட ஆட்சி யர்கள் மற்றும் சட்டமன்ற தொகுதிகளிலும் எம்எல் ஏக்கள், எம்பிக்கள் மற்றும் மாநில, மாவட்டத் தலை வர்கள் தலைமையில் ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றது.