தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் விடுத்துள்ள அறிக்கை யில், ‘‘திருவண்ணாமலை அருகில் தேவநந்தல் ஊராட்சியில் உள்ள மூலக்குன்று அடிவாரத்தில் பசுமை சூழ்ந்த பகுதியை அழித்து குப்பை கொட்டும் கிடங்கை மாவட்ட நிர்வாகம் அமைத்து மூன்று ஊராட்சிகளின் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவு களை கொண்டுவந்து கொட்டினார் கள். மூலக்குன்று தாதுக்கள் உள்ள வளமான குன்று. இதை ஆக்கிரமிக்கும் நோக்கத் தில் முந்தைய மாநில அரசு பல முயற்சி களை மேற்கொண்டது. இப்போதைய அரசு குப்பை கிடங்கை அமைத்து இப்பகுதியில் வாழும் மக்களை வெளி யேற்ற முயற்சிப்பதாக மக்கள் மத்தி யில் வலுவான சந்தேகம் எழுந்துள் ளது. இப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் நிலத்தடி நீர் மாசு படும், பத்தாயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும்,
ஆழ்துளை கிணறுகளின் தண்ணீர் பயன்படுத்த முடியாமல் போய்விடும். குடியிருப்பு களுக்கு துர் நாற்றம் வீசும், சுகாதா ரக்கேடு ஏற்படும்’’ என்று குறிப்பிட்டுள் ளார். மேலும், ‘‘இந்நிலையில், மே 29 அன்று காவல்துறை அனுமதி பெற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றபோது, மாவட்ட காவல்துறை எஸ்பி தலைமையில் ஊர்வலத்தை தடுத்து தலைவர்களை கீழே தள்ளியுள்ளது காவல்துறை. மாநிலத் தலைவர் பெ.சண்முகத்தை கையைபிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டனர். மாவட்டச் செயலாளர் பல ராமன் தாக்கப்பட்டார். நூற்றுக்கணக் கான பெண்களை கடும் வெயிலில் நடு ரோட்டில் தடுத்து நிறுத்தினர். மூன்று பெண்கள் மயக்கமடைந்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமை யில் ஜனநாயக ரீதியில் காவல்துறை அனுமதி பெற்று நடைபெற்ற போராட் டத்தில் அத்துமீறி காவல்துறை தாக்கு தல் தொடுத்ததை தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது. மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீ்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்கும், ஆயி ரக்கணக்கான ஏக்கர் விளைநிலங் களை பாழ்படுத்தும் வகையில் மூலக் குன்று அடிவாரத்தில் குப்பைகளை கொட்டுவதை கைவிட்டு மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று இடத்தில் குப்பை கொட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்’’ எனவும் அவர் தெரி வித்துள்ளார்.