states

img

8 மணிநேர வேலை - போராட்டத் தளபதி!

கம்யூனிஸ்ட் இயக்க தலைவரான தோழர் வ.சுப்பையா 1911 பிப்.7 அன்று, பிரெஞ்சு ஆதிக்கத்தின்கீழ் இருந்த புதுச்சேரியில் பிறந்தார்.  காந்தியின் மீதான பற்று காரணமாக தேசிய இயக்கத்தில் சேர்ந்தார். ‘சுதந்திரம்’ என்ற இதழை துவக்கினார். பின்பு கம்யூ னிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்தார். தமிழ்நாட்டில் கட்சியை விரிவுபடுத்தும் பணியை மேற்கொண்டார். 1935 இல் புதுச்சேரியில், உழைப்புக்கு ஏற்ற சரியான ஊதியம் கிடைக்காமல் 12 மணி நேரத்திற்கும் மேலாக அடிமைகளைப் போல பணியாற்றிக் கொண்டிருந்த, 15 ஆயிரம் ஜவுளித் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டினார். 1936 ஜூலை 30 அன்று ஜவுளித் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க பிரெஞ்சு காவல்துறையும், ராணுவமும் அவர்கள் மீது துப்பாக்கிக் சூடு நடத்தியது. இதில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இந்த அடக்குமுறை மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  பிரெஞ்சு அரசாங்கத்துடன், நேரடியாகப் பேசுவதற்கு பாரிசுக்குச் செல்லுமாறு சுப்பையாவை அறிவுறுத்தினார் நேரு. அதன்படி பாரிசுக்குச் சென்ற சுப்பையா, பிரெஞ்சு அரசாங்கத்துடன் வாதிட்டார். இதையடுத்து 8 மணிநேர வேலைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. மக்களுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் போராடிய சுப்பையாவை, பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு அரசுகள் சிறையில் அடை த்தன. பல ஆண்டு களை சிறையி லேயே கழித்தார். 1946 இல் தேசிய ஜனநாயக முன்னணி யின் சார்பில் புதுச்சேரி பிரதிநிதி கவுன்சில் உறுப்பினராகவும், 1947 இல் பிரெஞ்சு நாடாளுமன்ற மேலவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரெஞ்சு கால னித்துவ வாதிகளிடமிருந்து புதுச்சேரி சுதந்திரம் பெறுவதற்கு, தொடர்ந்து போராடி னார். கம்யூனிஸ்ட் கட்சி, தொழிற்சங்கம் மற்றும் வெகுஜன அமைப்புகளை பலப்படுத்தி போராடினார். இதன் பலனாக, 1954இல் புதுச்சேரி சுதந்திரம் பெற்றது. இதையடுத்து நடந்த தேர்தலில், மக்கள் முன்னணி - அமைத்து போட்டியிட்டு வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவரானார். பின்னர், 1969-73 இல் புதுச்சேரியின் விவசாயம், கூட்டுறவு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சரானார் சுப்பையா. இவரது பதவிக் காலத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 8 மணிநேர வேலைச் சட்டத்திற்கு போராடிய சுப்பையா, 1993 அக்.12 அன்று காலமானார்.