states

img

கம்யூனிஸ்ட் இயக்க மூத்த தலைவர் தோழர் கே.கந்தசாமி காலமானார் கே.பாலகிருஷ்ணன், இரா.முத்தரசன் இரங்கல்

திருப்பரங்குன்றம், அக்.17- கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த  தலைவர்களில் ஒருவரான தோழர் கே.கந்தசாமி காலமானார். அவ ருக்கு வயது 90. மதுரை மாவட்டம் திருப்ப ரங்குன்றம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான மக்கள் தலைவராக திகழ்ந்தவர் கே.கே. என அழைக்கப்பட்ட தோழர் கே.கந்தசாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர், மதுரை புற நகர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆகிய பொறுப்புகளில் நீண்ட காலம் செயலாற்றினார். இரண்டாம் வகுப்பு மட்டுமே படித்த, கல் உடைக்  கும் தொழிலாளியான இவர், கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்து, மார்க்சிய தத்துவத்தை படிப்படியாக கற்று, அதன்படி உறுதியாக பற்றி நின்று, 60 ஆண்டு காலத்திற்கும்  மேலாக பாட்டாளி மக்களின் நலன்  களுக்காகவே தன்னை அர்ப்ப ணித்துக் கொண்டவர். மதுரை மாவட்  டம் முழுவதும் எளிய மக்களின் போராட்டங்களை தலைமையேற்று நடத்தியவர். கம்யூனிஸ்ட் இயக்கத் தின் மகத்தான தலைவர்களான பி. ராமமூர்த்தி, கே.பி.ஜானகியம்மாள், என்.வரதராஜன் உள்ளிட்ட தலை வர்களோடு கட்சிப் பணியாற்றிய வர். விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களை மார்க்சிஸ்ட் கட்சிக்குள் ஏராளமாக கொண்டு வந்த களப் பணி யில் கம்பீரமாக திகழ்ந்தவர். பின்னாட்களில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியிலும் தோழர் கே.கந்த சாமி செயல்பட்டு வந்தார். சமீபகாலமாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தமது மகள் பொன்னி - மருமகன் அசோக் பராமரிப்பில் இருந்து வந்த  தோழர் கந்தசாமி ஞாயிறன்று இரவு  காலமானார்.

சென்னையில் அவ ரது உடலுக்கு சிபிஎம், சிபிஐ தலை வர்கள், ஏராளமான தோழர்கள் அஞ்  சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து அவரது உடல் திங்களன்று மாலை மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பி னர்கள் மதுக்கூர் இராமலிங்கம், சு. வெங்கடேசன் எம்.பி., கே.பால பாரதி, மூத்த தலைவர் சி.ராம கிருஷ்ணன், கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கே.ராஜேந்திரன் (மதுரை புறநகர்), மா.கணேசன் (மதுரை மாநகர்), ஆர்.சச்சிதா னந்தம் (திண்டுக்கல்), ஏ.வி.அண்ணாமலை (தேனி), மதுரை  மாமன்ற துணைமேயர் டி.நாக ராஜன், மாநிலக் குழு உறுப்பி னர்கள் இரா.விஜயராஜன், எஸ்.பி.ராஜேந்திரன், எஸ்.பாலா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் உள்பட ஏராளமானோர் அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினர். செவ்வாயன்று பிற்பகல் இறுதி நிகழ்ச்சி நடந்தது. கே.பாலகிருஷ்ணன்,  இரா.முத்தரசன் இரங்கல் தோழர் கே.கந்தசாமி மறை வுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தின் உழைப்பாளி மக்களின் நலன்களுக்காகவே தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் தோழர் கே.கந்தசாமி என கே.பாலகிருஷ்ணன் குறிப் பிட்டுள்ளார்.