திருநெல்வேலி, ஜூன் 13 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவர்களில் ஒருவரான தோழர் ஏ.நல்ல சிவன் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு அலுவலகத்தில் இலச்சினை( logo) செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது வெளியீட்டு விழாவிற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் தலைமை தாங்கினார், இலச்சினையை சிபிஎம் முன்னாள் மாவட்டச் செயலாளர் வீ.பழனி வெளியிட மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்வில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள்ஆர்.மோகன், எம்.சுடலைராஜ், ஆர்.எஸ்.துரைராஜ், பீர் முகம்மது ஷா,பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் நாராயணன், முத்து சுப்பிரமணியன், எஸ்.கே. செந்தில்,கீதா,பி.எம்.முருகன்,ஜோதி, ஆர்.முருகன், கிறிஸ்டோபர், கந்தசாமி, வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அருள் மற்றும் பிஎஸ்என்எல் செல்வராஜ் , சுப்பிரமணியன் ,பாலசுப்பிரமணியம், பன்னீர்செல்வம், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.