states

தீக்கதிர் விரைவு செய்திகள்

ஹோட்டல்களில் சேவைக் கட்டணம்  வசூலித்தால்  புகார் செய்யலாம்

சென்னை, ஜூலை 31- ஹோட்டல்கள், உணவகங்களில் சேவைக் கட்டணம் வசூலிக்கக் கூடாது  என விருதுநகர் மாவட்ட ஆட்சியர்  ஜெ.மேகநாதரெட்டி உத்தரவிட்டுள் ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பிரிவு 18(2)(1)-ன் கீழ் முறை யற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் நுகர்வோர் நலன்களைப் பாது காப்பதற்காக வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, ஹோட்டல்கள் அல்லது உணவகங்கள் உணவுக் கட்டணத்தில் சேவைக் கட்ட ணத்தை சேர்க்கக் கூடாது. ஹோட்டல்களில் நுகர்வோரிடம் சேவைக் கட்டணம் செலுத்தும்படி கட்டாயப்படுத்தக் கூடாது. உணவுக் கட்டணத்துடன் சேர்த்து மொத்தத் தொகைக்கு ஜிஎஸ்டி விதிப்பதால் சேவைக் கட்டணம் வசூலிக்கக இந்த  வழிகாட்டுதல்களை மீறி, ஒரு ஹோட்டல் சேவைக் கட்டணம் வசூலிப்ப தாக நுகர்வோர் அறிந்தால் அவர் தன்  பில் தொகையில் இருந்து சேவைக் கட்ட ணத்தை நீக்குமாறு சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்துக்கு தெரி விக்கலாம். மேலும் இது குறித்து 1915 என்ற  தேசிய ஹெல்ப் லைனில் நுகர்வோர்  புகார் அளிக்கலாம். உணவகங்கள் வழி காட்டுதல் களை மீறும் பட்சத்தில் நுகர் வோர் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சி யரிடம் விசாரணைக்காக ஆவணங் களுடன் எழுத்துப்பூர்வமாகவோ அல்லது மின்னணு முறையிலோ புகார்  அளிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை- லண்டன் வாரத்தில் ஏழு நாட்கள் விமான சேவை

ஆலந்தூர், ஜூலை 31-  சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து  லண்டன் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது.  சென்னையில் இருந்து லண்டனுக்கு நேரடி விமானம் என்பதால் இந்த விமானத்தில் எப்போதுமே பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த விமானத்தில் டிக்கெட் கிடைக்க பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்ய வேண்டும். சென்னையில் இருந்து  லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான  நிலையத்துக்கு செல்லும் இந்த  விமானம் பாரிஸ், ரோம், வாஷிங்டன்,  நியூயார்க், சிகாகோ, சான்பிரான் சிஸ்கோ உள்ளிட்ட பல்வேறு நகரங்க ளுக்கு செல்லும் பயணிகளுக்கு இணைப்பு விமானமாக செயல்பட்டு வருகிறது.  எனவே பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இந்த விமானத்தை கூடுதலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. பயணிகளின் கோரிக்கையை ஏற்று பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானம் ஆக.1 (திங்கட் கிழமை) முதல் வாரத்தில் 7 நாட்களும் விமான சேவை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு  சென்னை வந்து சேரும். பின்னர் இங்கிருந்து அதிகாலை 5.31 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த  விமானத்தின் பயண நேரம் சுமார் 13 மணி நேரம் ஆகும். இந்த அறிவிப்பு  பயணிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும், வரவேற்பையும் ஏற்படுத்தி  உள்ளது.

‘ஜேபி நட்டா கோ பேக்’ : பீகாரில் மாணவர்கள் போராட்டம்

பாட்னா, ஜூலை 31-  பாட்னா சென்ற பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு பல்கலைக்கழக மாணவ அமைப்பினர் ‘ஜேபி நட்டா கோ பேக்’ கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.  பீகாரில் ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதா  தளம் கூட்டணியில் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, தான் படித்த பாட்னா பல்கலைக்கழகத்தில் நடை பெறும் 2 நாள் மாநாட்டில் பங்கேற்பதற் காக அங்கு வந்தார்.  அப்போது அவரை வழிமறித்த அகில இந்திய மாணவர் சங்கத்தினர், ‘தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும்; பாட்னா பல்கலைக்கழ கத்திற்கு மத்திய பல்கலைக்கழக அந்தஸ்து  வழங்க வேண்டும்’ போன்ற கோரிக்கை களை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.  அப்போது சில மாணவர்கள் ‘ஜேபி  நட்டா கோ பேக்’ (ஜேபி நட்டாவே  திரும்பி போ) என்ற கோஷத்தை எழுப்பிய வாறு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். சில மாணவர்கள் நட்டாவின் கார் முன்பு படுத்து போராட்டம் நடத்தினர்.