சென்னையில் சனியன்று நடை பெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளை யாட்டுத் துறை அமைச்சர், “எல்லா வற்றையும் மாற்ற வேண்டும். எதுவுமே நிலையானது கிடை யாது எல்லாவற்றை யும் நாம் கேள்வி கேட்க வேண்டும் என்பதற் காக உருவான இயக் கம்தான் இந்த கம்யூனிஸ்ட் இயக்கமும், திராவிட முன்னேற்ற கழகமும். டெங்கு, மலேரியா நோயை போல் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என கூறினார். சனாதனம் பற்றி பேசி இந்துக்களின் உணர் வுகளை புண்படுத்தியதாக ஆளும் பாஜக அலறியுள்ள நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூர் முதன்மை நீதிமன் றத்தில் தமிழ்நாடு அமைச்சர் உதயநிதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.