states

மாற்றுத்திறனாளி வழக்கறிஞருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

சென்னை, நவ. 29- திருப்பூர் மாவட்டம், தாராபுரம்  முத்துநகரைச் சேர்ந்த மாற்றுத் ்திறனாளி வழக்கறிஞர் முருகானந்தம். இவரை அதே பகுதியைச் சேர்ந்த தண்ட பாணி என்பவர் அளித்த பொய் புகாரில், தாராபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் கைது செய்துள்ளார். தான் மாற்றுத்திறனாளி எனக் கூறிய முருகானந்தத்தை தாக்கிய துடன் ஆபாசமாக திட்டியுள்ளார். பின்னர் கோவை சிறையில் அடைக்க ப்பட்ட முருகானந்தம், 2020 மார்ச் 10ஆம் தேதி ஜாமீனில் விடுதலை செய்ய ப்பட்டார். இதையடுத்து தனக்கு நேர்ந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக முரு கானந்தம் தாக்கல் செய்த புகாரை விசாரித்த தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம், அவருக்கு 1 லட்சம் ரூபாயை இழப்பீடு வழங்க வும், உதவி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தர விட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த் தும், தனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு  வழங்கக் கோரியும், தமிழகம் முழு வதும் உள்ள சிறைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் முருகானந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பிர மணியன் மற்றும் குமரேஷ்பாபு ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் விசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட முருகானந் தத்துக்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். இந்தத் தொகையில் 4 லட்சம் ரூபாயை மாநில அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். மேலும், மாற்றுத் திறனாளிகளை கையாள்வது தொடர்பாக காவலர் முதல் அனைத்து காவல்துறை அதி காரிகளுக்கும் பயிற்சி வழங்க தமிழக டிஜிபிக்கு உத்தரவிட்டனர். தமிழகம் முழுவதும் காவல் நிலை யங்களில் கண்காணிப்பு கேமராக் களை பராமரிப்பது தொடர்பாக மாவட் டந்தோறும் அதிகாரியை நியமிக்க வேண்டும் எனவும் டிஜிபிக்கு உத்தர விட்ட நீதிபதிகள், மனுதாரருக்கு வழக்கு செலவாக 25 ஆயிரம் ரூபாயை வழங்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

;