கடலூர், ஆக. 4 - வளையமாதேவியில் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய நிலங்களை சேதப்படுத்திய என்எல்சி நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த படி, இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ள 6 விவசாயிகள் வெள்ளியன்று அலுவலகத்திற்கு வருகை தந்தனர். 15.5 ஹெக்டேருக்கு பயிர்கள் சேதமடைந்த நிலையில், 20 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. 6 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகைக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா வழங்கினார்.