states

img

அமெரிக்காவின் அடியாளாக செயல்படும் இஸ்ரேல் - ஜி.ராமகிருஷ்ணன்

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. பாலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலை வலியுறுத்தி உலக நாடுகள் முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. 1948க்கு முன்னதாக இஸ்ரேல் என்ற நாடே கிடையாது. 1948ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்தும் சேர்ந்து இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கினார்கள். அமெரிக்க ஆதரவோடு இஸ்ரேல் கிழக்கு ஜெருசலேம் உள்ளிட்ட பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியை ஆக்கிர மித்துக் கொண்டது. இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமான அல்-அக்சாவையும் ஆக்கிரமித்துக் கொண்டது. காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தியது சரியல்ல. ஆனால் அதற்குப் பழிவாங்குவதாகக் கூறி இஸ்ரேல் ஐ.நா.தீர்மானங்களை உதறித் தள்ளிவிட்டு - காசா, மேற்கு கரை பகுதிகளை - பாலஸ்தீனத்தை தாக்குகிறது. மேற்கு ஆசியாவில் அமெரிக்காவின் அடியாளாக இஸ்ரேல் செயல்படுகிறது. எனவே, இந்த போரை அமெரிக்கா ஆதரிக்கிறது. இஸ்ரேலை உருவாக்கியபோது அதை மகாத்மா காந்தியும், நேருவும் கண்டித்தனர். இந்தியாவில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தாலும், பாஜக பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டு அனைத்து அரசுகளுமே பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இருந்தனர். ஆனால், தற்போது இந்திய பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மோடி அரசின் இந்த நிலைபாட்டை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரை நிறுத்த வேண்டும். காசா, மேற்கு கரை பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு பாலஸ்தீனம் செயல்பட வேண்டும் என்ற ஐ.நா.தீர்மானத்தை செயல்படுத்த வேண்டும்.