சென்னை, அக்.15- சென்னை பரங்கிமலை ரயில்வே நிலை யத்தில் சத்யா என்ற கல்லூரி மாணவியை சதீஷ் என்ற இளைஞன் ஓடும் மின்சார ரயிலில் தள்ளி படுகொலை செய்துள்ளது தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற சம்பவங்கள் சென்னையில் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் காலை 6 மணிக்கு சுவாதி என்ற கல்லூரி மாணவி காதலிக்க மறுத்ததால் வெட்டி படு கொலை செய்யப்பட்டாள். சில மாதங்க ளுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலிக்க மறுத்ததால் கழுத்தை அறுத்து சுவேதா என்ற கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டாள். ஆதம்பாக்கத்தில் இந் துஜா என்ற இளம் பெண் காதலிக்க மறுத்த தால் அவள் வீட்டிற்குள்ளேயே நுழைந்து பெற்றோர்களின் கண் முன்னாலேயே டர் பன்டாயில் ஊற்றி கொளுத்தினான். அதை தடுக்கச் சென்ற அவளுடைய தாய் மற்றும் தங்கை மீதும் டர்பன்டை ஆயில் ஊற்றி கொளுத்தியதில் அவர்கள் மிகவும் மோச மாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சிசிடிவி கேமரா
இப்படி பல்வேறு சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக நடந்து கொண்டுள்ளது. இதை தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொள்ளவில்லை. இப்ப டிப்பட்ட குற்றங்கள் தொடர்வதற்கு மிக முக்கி யமான காரணம் வழக்குகளை துரிதமாக நடத்தி குற்றவாளிகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்குவதில் உள்ள கால தாம தம் ஒரு முக்கிய காரணமாகும். அனைத்து ரயில்வே நிலையங்களிலும் பேருந்து நிலை யங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். ரயில் நிலையங்களில் 24 மணி நேர மும் கூடுதலாக காவலர்கள் பணியில் அமர்த் தப்பட வேண்டும். இப்படிப் பட்ட கோரிக்கை கள் கடந்த காலங்களில் முன்வைக்கப் பட்டும் காவல் துறையும் தமிழக அரசும் அதை கண்டுகொள்ளாமல் இருப்பது தொடர் கிறது. சமீபகாலமாக பெண்கள் மீதான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் முன் னுக்கு வருகிறது. அதை தடுப்பதற்கான நட வடிக்கைகளை கூடுதலாக்க வேண்டிய தமி ழக காவல்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகும்.
இப்படிப்பட்ட சம்பவங்களை உடனுக்குடன் தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்வது தான் கல்லூரி, பள்ளி மாண விகள் தைரியமாக வெளியில் வருவதும் பயணம் செய்வதும் தொடரும். இல்லை யென்றால் பெற்றோர்களும் மாணவ- மாணவி களும் அச்சத்தோடு நடமாடக்கூடிய சூழ் நிலைதான் தொடரும். இது பெண் கல்விக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நிலைமை ஏற் படும். தமிழக அரசு காவல்துறையும் போது மான பிரச்சாரங்களை சட்ட விழிப்புணர்வு குறித்து பகுதி வாரியாக நடத்துவது பாலின நிகர் நிலை கல்வியை பாடமாக கொண்டு வரு வது பாலின சமத்துவம் குறித்தும் பாலின நிகர் நிலை குறித்தும் இளம் பருவத்தில் உள்ள ஆண்கள் பெண்கள் அது கல்லூரி பள்ளி பொது இடம் என அனைத்து பகுதிகளிலும் போதுமான பிரச்சாரத்தை மேற்கொண்டு இளைஞர்களின் ஒரு தலை காதல், கட்டா யப்படுத்தும் காதல், காதலிக்க மறுத்தால் படு கொலை செய்வது போன்ற வன்மமான சிந் தனை களையப்படுவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டியது மிக அவசி யமாகும். இதில் காவல்துறை மட்டுமல்ல இந்த சமூகத்தில் இருக்கக்கூடிய பெண்கள் மீதான அக்கறை உள்ள அமைப்புகள் பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த சமூக அநீதிக்கு எதிராய் குரல் கொடுக்க வேண் டிய அவசியம் உள்ளது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு வலியுறுத்துகிறது.