states

தாறுமாறாக ஓட்டிய ஷேர் ஆட்டோ மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

திருப்பூர், ஜன. 25 - திருப்பூரில் ஓட்டுனர் மது போதையில் ஷேர் ஆட்டோவை தாறுமாறாக ஓட்டியதால் ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவி உயிரிழந்தார். திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியை சேர்ந்தவர் முருகேசன். அவரது மனைவி சங்காயி, மூத்த மகள் கோகிலா மற்றும் இளைய மகள் ஜனனி ( சிக்கண்ணா அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.) இவர்கள் நான்கு பேரும் மருத்துவமனை செல்வதற்காக, அவ்வழியே ஆட்டோ ஓட்டி வந்த குணசேகரன் என்பவ ரின் ஆட்டோவில் கல்லூரி சாலை வழியாக வந்து கொண்டி ருந்தனர். ஹவுசிங் யூனிட் என்ற இடத்தில் ஆட்டோ வந்து கொண்டிருந்தபோது எதிரே போட்டி போட்டு கொண்டு வந்த மூன்று ஆட்டோக்களில் ஒரு ஷேர் ஆட்டோ, குடும்பத் துடன் வந்து கொண்டிருந்த முருகேசன் ஆட்டோ மீது மோதியது. இதில் இரண்டு ஆட்டோக்களும் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முருகே சனின் இரண்டாவது மகள் ஜனனி, அவரது தந்தை முருகே சன், முருகேசனின் மனைவி சங்காயி, மகள் கோகிலா, ஆட்டோ ஓட்டுனர் குணசேகரன், உள்ளிட்டோரை பொது  மக்கள் மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனிடையே கல்லூரி மாணவி ஜனனி மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். அதிவேகமாக வந்து விபத்து எற்படுத்திய ஷேர் ஆட்டோ ஓட்டுநரை பிடித்து பொது மக்கள் விசாரிக்கையில், அவர் குடிபோதையில் ஆட்டோவை போட்டி போட்டுக் கொண்டு ஆட்டோவை ஓட்டி வந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆட்டோ ஓட்டுனர் சின்னதுரையை சரமாரியாக அடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருப்பூர் பூத்தார் தியேட்டர் பகுதியை சேர்ந்த ஷேர் ஆட்டோ ஓட்டுனர் சின்னதுரையை கைது செய்து திருப்பூர் வடக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர்.

அரசுப் பேருந்துகள் ஜப்தி

ஈரோடு, ஜன.25- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கெம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி முத்துசாமி. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வாணிப்புத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து பங்களாபுதூர் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.  வழக்கை விசாரித்த நீதிபதி, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ.12 லட்சத்து 41 ஆயிரம் வழங்க கடந்த 30.3.2021 அன்று உத்தரவிட்டார். இந்த தொகையை அரசுப் போக்குவரத்து கழக நிர்வாகம் வழங்காததால் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து நீதிபதி தயாநிதி அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதன்பேரில் கோபியில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட தயாராக இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.