states

img

தமிழ்நாடு வங்கியை உருவாக்கினால் விவசாயிகளுக்கு சேவைகள் அதிகரிக்கும்

சென்னை, டிச.1 - தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி  உருவாக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளுக்கு சேவைகள் அதிகரிக்கும், வங்கிகள் மென்மேலும் விரிவடையும் என்று  கூட்டு றவு வங்கி ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தி யுள்ளது இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பனை அவரது இல்லத்தில் சந்தித்து சம்மேளன தலை வர் தி.தமிழரசு, பொதுச் செயலாளர் இ.சர்வேசன், நிர்வாகிகள் சு.துரைராஜ், ஆ.ராஜகேசி, மு.கோவிந்த ராஜ், ஸ்டாலின், செந்தில் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர். குறிப்பாக, நகர கூட்டு றவு வங்கிகளை வலுவாக்கி,  வளர்ச்சி விகிதத்தை உயர்த்த மண்டல அளவில் நகர கூட்டுறவு வங்கிகளை இணைக்க வேண்டும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு 20 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 20 விழுக்காட்டிற்கு பதிலாக கருணைத்தொகை 10 விழுக்காடு மட்டுமே வழங் கப்பட்டுள்ளது. எனவே, எஞ்சிய 10 விழுக்காடு தொகையையும் வழங்க வேண்டும். முதுநிலை பட்டியல் வெளியிட்டு வங்கிகளில் காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாவட்ட  மத்திய கூட்டுறவு வங்கி களை ஒரு மாவட்டத்திற்கு ஒரு வங்கி என்ற அடிப்படை யில் பிரிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட அம்சங்களை வலியுறுத்தினர். இவற்றிற்கு பதிலளித்த அமைச்சர், ஊதிய உயர்வு  விழுக்காடு கோரிக்கையை  கனிவுடன் பரிசீலிப்பதாக வும், சம்மேளனத்தின் ஆலோசனைகளை கவனத் தில் கொள்வதாகவும் உறுதியளித்தார்.