ஆண்டுக்கு 2 பொதுத்தேர்வாம்
11 மற்றும் 12ஆம் வகுப்பு மாண வர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சகம் அறிவித்துள் ளது. பெரும்பாலான ஏழை எளிய மாணவர்களை கல்விக்கூடங்களிலிருந்து வெளியேற்றும் வகையில் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு புதிய கல்விக்கொள்கைகளை வடிவ மைத்து, மாநிலங்களின் மீது திணிக்க முயற்சித்து வருகிறது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் வடி வமைக்கப்படும் 2024 பாட புத்தகங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு எழுதும் வகையில் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழு மாற்றி அமைக்கவுள்ளது. மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் நடத்தப்படும் இரண்டு பொதுத் தேர்வு களில், எதில் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், 11, 12ஆம் வகுப்பு மாண வர்கள் இரண்டு மொழிப் பாடங்களை படிக்க வேண்டும் என்றும், அதில் ஒன்று கட்டாயம் இந்திய மொழியாக இருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள் ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவு மாண வர்களின் கற்றல் திறனை பாதிக்கும் என்று கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள னர்.
விசைப்படகு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவு
சென்னை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:- இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு தற்போது பயன்படுத்த இயலாத நிலையில் உள்ள தமிழக மீன வர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்குவதில் விடுபட்டுப் போன 21 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.5,00,000 மற்றும் 12 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1,50,000- ஆக மொத்தம் 33 படகுகளின் உரிமை யாளர்களுக்கு ரூ.1.23 கோடி முதலமைச்ச ரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி யுதவி வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
7 நாட்கள் மழை வாய்ப்பு
தமிழகத்தில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழக பகுதிகளின் மேல் நில வும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரண மாக, ஆகஸ்ட் 23 முதல் 29 ஆம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மித மான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீசார் வாட்ஸ்-அப் குழுக்களை அமைத்து செயல்பட டிஜிபி உத்தரவு
சென்னை,ஆக.23- தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் அனைவரும் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வசதியாக, வாட்ஸ்-அப் குழுக்களை அமைத்து செயல்படுமாறு போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இந்த வாட்ஸ்-அப் குழுக்களில் காவல்துறை நலன் சார்ந்து பதிவிடப்படும் பதிவுகளுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க, தலைமை அதிகாரிகள் இருக்கும் வாட்ஸ்-அப் குழுக்களுக்கு அப்பதிவுகள் அனுப்பப்பட திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பதிவுகள் தலைமை அதிகாரிகள் இருக்கும் அடுத்தடுத்த குழுக்களுக்கு 30 நிமிடங்களில் அனுப்பப்படும். இந்த குழுக்களில் காவலர் நலன் சார்ந்த துறைரீதியான பதிவுகளை தவிர மற்ற பதிவுகளை பதிவிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு விற்பனைக்காக டெண்டர்
சென்னை, ஆக. 23- நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12ஆம் தேதி கொண்டா டப்பட உள்ளது. இதையொட்டி சென்னை தீவுத்திடலில் ஆண்டு தோறும் பட்டாசு விற்பனை நடை பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தீவுத்திடலில் பட்டாசு விற்பனைக்காக தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி யுள்ளது. அதன்படி, அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம்தேதி வரை 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 55 கடைகள் அமைப்ப தற்கான டெண்டரை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது. விரைவில் டெண்டர் இறுதி செய்யப்பட்டு கடை கள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
காமராஜர் துறைமுக நிர்வாக இயக்குநர் பதவியேற்பு
சென்னை,ஆக.23- சென்னை காமராஜர் துறை முகத்தின் நிர்வாக இயக்குநராக ஜே.பி. ஐரீன் சிந்தியா பதவி ஏற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு மத்திய பிரதேச மாநில அரசின் நிதித்துறை இயக்கு னராக பதவி வகித்துள்ளார். இவர் 2008-ஆம் ஆண்டு மத்தியப்பிரதேச மாநில ஐ.ஏ.எஸ். அணியை சேர்ந்தவர். சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. (நிதி), அமெரிக்காவில் உள்ள எம்.ஐ.டி.யில் நுண் பொருளாதாரம் பயின்றுள்ளார். இவர் போபால் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி யாகவும் சத்னா மாவட்ட உதவி ஆட்சி யராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் புர்கான்பூர், பன்னா மாவட்டங்களில் ஆட்சியராகவும் பணிபுரிந்துள்ளார்.