சேலம், ஜூன் 20- இயக்க வாய்ப்புள்ள கூட்டுறவு நூற்பாலைகளை தமிழக அரசு இயக்க வேண்டும்.தொழிலாளர் களை பணிநிரந்தரம் செய்து, குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும் என்று சிஐடியு பஞ்சாலை தொழிலாளர் சம்மேள னம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பஞ்சாலைத் தொழி லாளர் சம்மேளனத்தின் (சிஐடியு) மாநிலக்குழு கூட்டம் ஜூன் 20 அன்று சேலத்தில் மாநிலத் தலைவர் எம். சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலப் பொதுச் செய லாளர் எம்.அசோகன் ,பொருளா ளர் எஸ்.சக்திவேல் மற்றும் மாநி லக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. சேலம் மாவட்ட கூட்டுறவு நூற் பாலை உட்பட இயக்க வாய்ப்புள்ள கூட்டுறவு நூற்பாலைகளை தமி ழக அரசு இயக்க வேண்டும். நூற் பாலைகளில் பணிபுரியும் தொழிலா ளர்களை சட்டப்படி பணி நிரந்தரம் செய்து, குறைந்தபட்ச கூலி வழங்கு வதை உறுதி செய்ய வேண்டும். 23 தேசிய பஞ்சாலைகள், கொரோனா பெருந்தொற்று தடுப்பு ஊரடங்கு காலத்திற்கு பின்பாக இயக்கப்படா மல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். தமிழகத்தில் உள்ள 7 தேசிய பஞ்சாலைகள் உட்பட ஒன்றிய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள பஞ்சாலைகளை இயக்க வேண்டும். தொழிலாளர் நலன் காக்க ஒன்றிய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பஞ்சாலைகளில் பணிபுரியும் பயிற்சியாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் தினசரி ரூ.512 வழங்க வேண்டும் என்பது தமிழக அரசின் ஆணையாகும். ஆனால் மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. ஒன்றிய, மாநில அரசுகள் ஏற்றுக்கொண்ட 600 ரூபாய்க்கு குறைவில்லாத ஊதியம் பஞ் சாலை தொழிலாளிகளுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வுபெற்ற வயதான தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச பென்ஷன் ரூ. 6 ஆயிரத்துக்கு குறைவில்லாமல் வழங்க வேண்டும். குறைந்தபட்ச கூலியை தீர்மானிக்க அமைக்கப்பட்ட குழுவின் உறுப்பினர்கள் இருவர் மரணமடைந்தனர்.இதனால் குழு வின் செயல்பாடு நின்றுபோயுள் ளது. குழுவை செயல்படுத்தி பஞ்சாலை தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச கூலியை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு பஞ்சா லைகளில் ஒப்பந்தப்படி வழங்க வேண்டிய அரியர்ஸ் தொகை களை காலதாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.