சென்னை, ஜூன் 8 – சென்னை எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் கட்டுமான பணியில் தங்கி வேலை செய்து வந்த மேற்கு வங்க தொழிலாளி காணாமல் போய் ஒருமாதம் கடந்தும் காவல்துறை மெத்தனம் காட்டுவதாக கூறி கட்டு மான தொழிலாளர்கள் புதனன்று (ஜூன் 8) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் அருகே உள்ள அன்னை சிவகாமி நகரில் செந்தில் என்பவர் வீட்டில் கடந்த மே 7 ஆம் தேதி பணியின் போது தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக சோரீப் என்ற தொழிலாளியை கட்டிவைத்து அடித்த தாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த தொழிலாளி காணாமல் போன தாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிகை எடுக்கப்பட வில்லை எனவும் சிஐடியு தலைவர்கள் தெரிவித்தனர். மாயமான சோரீபை கண்டுபிடித்து தரக்கோரி கட்டுமானம், அமைப்புசாரா மற்றும் மாதர் சங்கம் சார்பில் ஆர்ப்பா ட்டம் நடைபெற்றது. இதில் கட்டுமான சங்க பகுதித்தலைவர் ஜெ.அன்பு தலை மையில் சிஐடியு தலைவர் எஸ்.கே.மகே ந்திரன், மாமன்ற உறுப்பினர் மாவட்ட செயலாளர் ஆர்.ஜெயராமன், சிஐடியு நடராஜன், மாவட்ட தலைவர் கட்டுமான சங்கம் மாவட்ட செயலாளர் லூர்துசாமி, மாதர் சங்கம் மாவட்ட செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, சிபிஎம் பகுதிச் செயலாளர் கதிர்வேல், கட்டுமான பகுதி தலைவர் முருகன், மாதர் சங்க பகுதி செயலாளர் கஸ்தூரி, அமைப்புசாரா செயலாளர் உமா காந்தன் ஆகியோர் பங்கேற்று பேசினர். இந்த போராட்டத்தில் வட மாநில தொழிலாளர்கள் 200க்கும் மேற்பட் டோர் கலந்துகொண்டனர்.