states

குழந்தைகள் நலனுக்கு ஒதுக்கிய ரூ.1000 கோடி என்ன ஆனது?

அகமதாபாத், ஜூலை 29- பாஜக ஆளும் குஜராத் மாநிலத் தில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் மரணம் அடைந் துள்ளன. குஜராத் மாநிலம் குட்ச் மாவட்டம் லூட்பாய் கிராமத்தில் மட்டும் மே மாதம் இரண்டு குழந்தைகளும் ஜூலை மாதம் 3 குழந்தைகளும்  என 0-15 மாத வயது மட்டுமே உடைய 5 குழந்தை கள் இறந்துள்ளன. இதனை தொடர்ந்து அங்கு தனி யார் தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப் பட்டு 322 குழந்தைகளுக்கு நடத்திய பரிசோதனையில் அக்கிராமத்தில் 10 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தை களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளிவந்த தரவுகளின்படி குஜராத் மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மொத்தம் 1 லட்சத்து 25 ஆயிரத்து 707 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன.  

பாஜக ரூ.3 ஆயிரம் கோடி செலவு செய்து வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைத்த நர்மதா மாவட்டத்தில் மட்டும் 12 ஆயிரத்து 429 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 1,01,586 குழந்தைகள் எடை குறை பாட்டாலும் 24 ஆயிரத்து 121 குழந்தை கள் தீவிரமான எடை குறைபாட்டாலும் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிய வருகிறது. உண்மைநிலை இவ்வாறிருக்க குழந்தைகள் நல திட்டத்திற்கு குஜராத் பாஜக அரசு ஆண்டுதோறும் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்து சிரஞ்சீவி யோஜனா, பால் போக் யோஜனா, வைட்டமின் யுக்த் போஷன் ஆஹார் யோஜனா, கன்யா கெளவானி யோஜனா, பால் சகா மையம் போன்ற  திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.  உண்மை நிலையை ஒப்பிட்டு பார்க்கும் போது, இப்பணத்தில்  பாஜக அரசு  ஊழல் செய்திருக்கும் என்ற வலுவான சந்தேகத்தை எழுப்பியுள் ளது. இறந்த குழந்தைகள் அனைவரும் எடை குறைபாடு, காய்ச்சல் உள்ளிட்ட ஊட்டச்சத்து குறைபாட்டு காரணங்க ளாலேயே உயிர் இழந்துள்ளனர்.ஆனால் அரசு அதிகாரிகள் பாஜக அரசை காப்பாற்றும் நோக்கத்தோடு இது ஊட்டச்சத்துக்  குறைபாடு மரணம் அல்ல, உடல் எடை குறை பாட்டால் உண்டான மரணம் என்று விசித்திரமாக விளக்கமளித்துள்ளனர். தரவுகள் இருப்பதால் தானே பாஜக ஆட்சியின் அவலநிலை பொது  மக்களுக்கு தெரியவருகிறது. அத னால் இந்த ஆண்டு நடக்க இருக்கும் தேசிய குடும்ப நல ஆய்வில் ரத்தச் சோகை குறித்தான தரவுகளை பெறு வதை பாஜக அரசு நீக்கி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.