காபூல், ஏப்.23- ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில் 33 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதில் குழந்தைகளும் அடங்கும். 43 பேர் கடுமையான காயம் அடைந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்த இரண்டா வது குண்டு வெடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த குண்டுவெடிப்புக்கு இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது அதிகாரத்தில் இருக்கும் தலிபான் அமைப்புக்கு எதிரான அமைப்புகளில் ஒன்று தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று தகவல்கள் கூறுகின்றன.