states

மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய திட்டம்

சென்னை,நவ.24- மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்டம் உலகவங்கி நிதியு டன் ஆயிரத்து 763 கோடியே 19 லட்சம்  ரூபாய் செலவில் துவங்கப்பட உள்ள தாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் மாற்றுத் திறனாளிக ளுக்கான மாநில ஆலோசனை வாரிய  கூட்டம் வியாழனன்று(நவ.24) நடை பெற்றது. இந்த கூட்டத்தில் முதல மைச்சர் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு: அரசின் உதவிகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு உறுதியாக கிடைக்க வேண்டும். அனைத்து மாவட்ட ஆட்சி யர் அலுவலகங்களிலும் முக்கிய  நிகழ்வுகளின் போது செவித்திறன்  பாதிக்கப்பட்டோர் பயன்பெறும் வகையில், சைகை மொழிபெயர்ப் பாளர் வசதி மாவட்ட நிர்வாகம் மூலம் செய்துதர ஆணையிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தன்னிச்சையா கவும் பிறரைச் சார்ந்து இல்லாமலும் சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று இந்த அரசு கருதுகிறது.

எனவேதான், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு வேலைவாய்ப்புகளில் 4 விழுக்காடு இட ஒதுக்கீடும், தனியார் துறைகளிலும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்த அவர்களுக்கு உகந்த பணியிடங்களைக் கண்டறிய வல்லுநர் குழு அமைத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  மாவட்ட அளவில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு  வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு  வருகின்றன. மாற்றுத்திறனாளிக ளுக்கு சரியான முறையில் வேலை வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய, உயர்மட்டக் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்குப் பொது  இடங்களில் தடையற்ற சூழலை அமைக்கும் நடவடிக்கையாக, சாய் தளப் பாதை, மின்தூக்கி பொருத்துதல், மாற்றுத் திறனாளிகளுக்கான கழி வறை, பார்வையற்றோர் பயன்பாட்டிற் காக தரைத் தளங்களில் அமைக்கப் பட்டுள்ளன. செவித்திறன் குறைபாடு உடை யோருக்கு தகவல் பரிமாற்றம் செய்ய தகவல் பலகைகள், சைகை மொழி பெயர்ப்பாளர்கள் நியமனம் போன்ற வசதிகள் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாற்றுத் திறனாளிகளுக்கான உரி மைகள் திட்டம் உலகவங்கி நிதியுடன் ஆயிரத்து 763 கோடியே 19 லட்சம் ரூபாய் செலவில் துவங்கப்பட உள்ளன. அடுத்த 6 ஆண்டுகளில், அனைத்து மாவட்டங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகளின் திறன்  மேம்பாடு மற்றும் சுய வேலை வாய்ப்புக்கான பயிற்சியும், அரசின் தற்போதுள்ள திட்டங்களுடன் ஒருங்கி ணைத்து இதர அரசுத் துறைகளின்  மூலம் தொழில்திறன் பயிற்சியும் அளிக்கப்படும். “சமூகப் பதிவு அமைப்பு” (Social Registry) மூலம்,  மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்கள், பராமரிப் பாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு மற்றும் அவர்களுக்கான பயன்களை அடையாளம் காணுதல், தேர்வு செய்தல் மற்றும் வழங்குதல் ஆகியவை உறுதி செய்யப்படும். இப்படி ஏராளமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இன்னும் நிறைய திட்டங்களை செயல்படுத்தக் காத்திருக்கிறது.   இவ்வாறு முதலமைச்சர் பேசினார். இந்தகூட்டத்தில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, வெங்கடாசலம் எம்.எல்.ஏ., துறை செயலாளர் ஆனந்த குமார் உள்ளிட்ட 12 துறை செயலாளர்கள், ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.