திருப்பூர், ஏப்.14- இந்தியா கூட்டணியின் மக்கள வைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டம், திருப்பூர் மாவட்டம், அவி நாசியில் சனிக்கிழமையன்று நடை பெற்றது. இதில், இந்தியா கூட்டணி சார் பில் நீலகிரி மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பா ளர் ஆ.இராசாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருப்பூர் தொகுதி யில் போட்டியிடும் சிபிஐ வேட்பா ளர் கே.சுப்பராயனுக்கு கதிர் அரி வாள் சின்னத்திலும் வாக்கு சேக ரித்து, முதல்வர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்திற்கே நம்பிக்கை தந்த திருப்பூர், கோவை நகரங்கள்
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, புதிய இந்தியாவை உரு வாக்குவேன் என்று கூறினார். ஆனால், அவரின் பத்தாண்டுகால ஆட்சியில் என்ன மாதிரியான இந்தியாவை உருவாக்கியிருக்கி றார்? பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தும் மோடி கொடுத்த வாக்கு றுதிகள் எதையும் செய்யவில்லை! அதனால்தான் எந்த மேடையிலும் அவரால் திட்டங்களையும், சாத னைகளையும் சொல்ல முடிய வில்லை! திருப்பூரும், கோவையும் எப்ப டிப்பட்ட ஊர்களாக இருந்தன? தமிழ்நாட்டின் எந்த மாவட்ட மக்க ளும், எப்படிப்பட்ட கஷ்டத்தில் இருந்தாலும் - திருப்பூருக்கும் கோவைக்கும் வந்தால் - ஏதாவது வேலை கிடைத்துவிடும் என்று பல ருக்கும் நம்பிக்கை தருகிற நகரங்க ளாக இந்த இரண்டு ஊர்களும் இருந்தன!
ஏல அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்படும் அவல நிலை
அப்படிப்பட்ட இந்த மேற்கு மண்டலத்தின்மேல் மோடி நடத்திய இரட்டைத்தாக்குதல்தான், பண மதிப்பிழப்பு! ஜி.எஸ்.டி! தொழில் நிறுவனங்களில் “வேலைக்கு ஆட்கள் தேவை” என்று நோட்டீஸ் கள் ஒட்டப்பட்டிருந்த காலம் போய் – மோடி ஆட்சியில் “ஏல அறிவிப்பு” நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டிருக்கும் நிலைமைக்கு நிறுவனங்கள் வந்து விட்டன! மோடியை நம்பி ஏமாந்துவிட்ட தாக, பல தொழிலதிபர்கள் வேத னையோடு புலம்புகிறார்கள்! இந்தப் பகுதியில் இருக்கிற சிறு குறுதொழில்களை நடத்தக்கூடிய வர்கள் பேசிய ஒரு வீடியோவைப் பார்த்தேன். அதில் பேசியவர்கள், “5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு குறு தொழில் நிறுவனங்கள் என்று மேற்கு மண்டலம் வளர மன்மோகன் சிங் ஆட்சிதான் காரணம். ஆனால், பாஜக ஆட்சியில் பணமதிப்பி ழப்பு – ஜிஎஸ்டி -என்று கோவை, திருப்பூர் தொழில்கள் தங்களு டைய அடையாளத்தையே இழந்து விட்டது என்று தங்களின் மனக் குமுறலை வெளிப்படுத்தினார்கள்.
உற்பத்தியாளர்கள் போராடியும் குறையாத பஞ்சு, நூல் விலை
அதுமட்டுமா, பஞ்சு, நூல் விலையைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எத்தனை முறை திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்தார் கள்? வங்கதேசத்தோடு மோடி செய்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திருப்பூருக்கும் மேற்கு மண்ட லத்துக்கும் பேரிடியாக அமைந்து விட்டது! தவணை தவறிய கட னைச் செலுத்த 6 மாதம் வரை இருந்த அவகாசத்தை, சர்பாஸி (SARFAESI) சட்டத்தில் 3 மாதமாகக் குறைத்துத் தொழிலதிபர்களின் சொத்துக்களை ஏலம் விட்டதுதான் அவர் தந்த பரிசு. டெக்ஸ்டைல் மட்டுமல்ல, வாகன உற்பத்தி, வெட்கிரைண்டர் உற்பத்தி, சிறு, குறு பவுண்டரிகள், இன்ஜினியரிங் மோட்டார் பம்புகள் உற்பத்தி, விசைத்தறிகள் என்று இந்தப் பகுதியுடைய எல்லாத் துறைகளிலும் மிகப்பெரிய மந்த மான சூழலை மோடியின் பாஜக ஆட்சி உருவாக்கியிருக்கிறது. '
குஜராத்திற்கு சாதகமாக தமிழகத்திற்கு துரோகம்
நேற்று கோவையில் சொன்ன பகிரங்கமான குற்றச்சாட்டை திருப்பூரிலும் மக்கள் மன்றத்தில் வைக்க விரும்புகிறேன். தமிழ் நாட்டில் தொழில் தொடங்க முன் வந்த நிறுவனத்தை மிரட்டி, குஜ ராத்தில் தொழில் தொடங்கச் செய்திருக்கிறார்கள் என்று நேற்று சொன்னேன். அதில் கூடுதலாக இன்னொரு செய்தியை இன்று சொல்கிறேன். பி.எல்.ஐ. திட்டம் என்று சொல்லி, தமிழ்நாட்டு மக்க ளிடம் வரியை வசூலித்துவிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் குஜராத்தில் தொழில் தொடங்கிட வேண்டும் என்று சலுகை தருகிறார்கள். இவர் கள்தான் இப்போது கோவைக்கும் திருப்பூருக்கும் வாக்கு கேட்டு வரு கிறார்கள். சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு என இந்தியா விலேயே முதன்முதலில் தனி யாகக் கொள்கையை கொண்டு வந்ததே தலைவர் கலைஞர் அவர் கள்தான். 1970-ஆம் ஆண்டிலேயே சிட்கோ எனக் கூறப்படும் தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத் தைத் தொடங்கி, இன்றைக்குத் தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் 127 தொழிற்பேட்டைகள் இருக் கின்றன.
எம்எஸ்எம்இ துறையில் மூன்றாமிடத்தில் தமிழகம்
இந்தியாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எண்ணிக்கையில் தமிழ்நாடு 3-ஆவது இடம் வகிக்கிறது. தமிழ் நாட்டில், சுமார் 50 லட்சம் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இருப்பதாக மதிப்பி டப்பட்டிருக்கிறது. இது நாட்டி லுள்ள மொத்த குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் 7.8 விழுக்காடு! தமிழ்நாட்டில் இருக்கிற MSME நிறுவனங்களில் குறு நிறுவனங்கள் 99 விழுக்காடு! வளர்ந்து வரும் துறைகளுக்கான மையமாகவும் தமிழ்நாடு உருவாகி வருகிறது. இதன் மூலமாகத்தான் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுக்காக அனைத்துத் திட் டங்களையும் தீட்டிக் கொடுத்து வரு கிறோம்.
3 ஆண்டு ஆட்சியில் முன்னேறிய தமிழ்நாடு
நாட்டில் எளிமையாக தொழில் புரிய உகந்த பட்டியலில் தமிழ் நாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 14-ஆவது இடத்தில் இருந்தது. பெருமையாகச் சொல்கிறேன். இப்போது 3-ஆவது இடத்திற்கு வந்திருக்கிறோம். அடுத்து முதல் இடத்தைப் பிடிப் பதுதான் நம்முடைய இலக்கு. பாஜகவை எதிர்த்து கட்சியே நடத்த முடியாத பழனிசாமி இப்படி நாம் தொடர்ந்து உழைத்து கொண்டு இருக்கிறோம்! ஆனால், இன்னொரு பக்கம் நாட் டையே பாழ்படுத்திய பாஜக-வுடன் கள்ளக் கூட்டணி வைத்துக் கொண்டு பழனிசாமி வருகிறார். பழனிசாமிக்கும் ’தமிழ்நாடு பாஜக வுக்கும்தான்’ பிரச்சனையே தவிர - அவருக்கும் மோடி - அமித் ஷா வுக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. யார் விசுவாசமான அடிமை என்பதில் வேண்டும் என்றால் இவர்களுக்குள்ளே சண் டையாக இருக்கலாம். ஆனால் எந்தக் காலத்திலும், பிரதமரை எதிர்த்து, ஒன்றிய பாஜகவை எதிர்த்து, பழனிசாமியால் கட்சி நடத்தவும் முடியாது; அரசியல் நடத்தவும் முடியாது!
டிடிவி தினகரனையும் அடிமையாக மாற்றிய பாஜக
ஏன் என்றால், சசிகலாவிடம் இருந்து பன்னீர்செல்வத்தைப் பிரித்து தர்மயுத்தம் நாடகம் நடத்த வைத்ததே பாஜக தான். சசிகலா சிறைக்குப் போன பிறகு, முதலமைச்சர் ஆன பழனிசாமி யை – தங்கள் பக்கம் கொண்டு வந்ததும் பாஜக தான். இரு துருவங்களாக இருந்த பழனி சாமியையும் பன்னீர்செல்வத்தை யும் ஒன்றுசேர்த்ததும் பாஜகதான். தினகரனைக் கைது செய்து சிறை யில் அடைத்து – அவரையும் தங்க ளுடைய அடிமையாக மாற்றிய தும் பாஜக தான். இன்று பன்னீர் செல்வத்தையும் தினகரனையும் மிரட்டித் தேர்தலில் நிற்க வைத்தி ருப்பதும் பாஜக தான். சசிகலா வை அரசியல் பக்கம் வரக்கூடாது என்று தடுத்ததும் பாஜக தான். பழனிசாமியைத் தனியாக நிற்க வைத்ததும் பாஜக தான். இப்படி டிவி சீரியலில் திடீர் திடீர் என்று ஆட்களையும் காட்சி களையும் மாற்றுகிற மாதிரி - சதி நாடகங்களை அரங்கேற்றி இருக்கி றது பாஜக தலைமை! உறுதி யோடு சொல்கிறேன்! இந்தத் தேர்த லில் நேரடி பாஜகவும் மண்ணைக் கவ்வும்! பாஜகவின் தொங்குசதை களும் படுதோல்வி அடைவார் கள்! தமிழ்நாட்டை வஞ்சித்த பாஜக வையும்- தமிழ்நாட்டை பாழ் படுத்திய அதிமுகவையும் ஒரு சேர வீழ்த்துங்கள்.