அக்டோபர் 14-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமை யில் தமிழ்நாடு அமைச்ச ரவை கூட்டம் நடைபெறு கிறது. வரும் 17-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப் பேரவை கூடவுள்ள நிலையில், 14-ஆம் தேதி மாலை 6 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அமைப்புகள் குறித்த 4-வது பட்டி யலை அந்நாட்டு அரசு ஒன்றிய அரசுக்கு வழங்கி யுள்ளது. ஏற்கெனவே சுவிஸ் அரசு அளித்த 3 பட்டியல்களையும் ஒன் றிய அரசு பொது வெளி யில் வெளியிடாத நிலை யில், 4-வது பட்டியலின் விபரங்களையும் மறை முகமாக வைத்துள்ளது மோடி அரசு.
சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் சின்னத் தை தேர்தல் ஆணையம் முடக்கியதற்கு எதிராக உத்தவ் தாக்கரே தரப்பு தில்லி உயர்நீதிமன்றத் தில் முறையீடு செய்துள்ளது.
பள்ளியை சுத்தம் செய்வ தாக நிர்வாகத்திடம் தெரி வித்துவிட்டு முன்னறி விப்பின்றி ஆர்எஸ்எஸ் பயிற்சி நடத்தியிருக் கின்றனர். கோவையில் பள்ளி வளாகத்தில் நடந்த ஆர்எஸ்எஸ் கூட்டம் பற்றிய கேள்விக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்துள் ளார்.
21-36 வயதுடையவர் களே சினைமுட்டை தானம் செய்யவேண்டும். திருமணம் ஆகி கண வரின் ஒப்புதல் இருக்க வேண்டும். இந்த விதிமுறையை பின்பற்றி வாடகைத்தாய் மூலம் நடிகர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாரா தம்பதியினர் குழந்தை பெற்றனரா? என மருத்து வக்கல்லூரி இயக்குநர கம் மூலம் விளக்கம் கோ ரப்படும் என தமிழ் நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் பேசியுள்ளார்.
பஞ்சாப் மொகாலியில் வணிக வளாகம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.
காஸ்பியன் கடலின் கரைகள் இடம் பெற்றுள்ள ஐந்து நாடுகளும் இணைந்து காஸ்பியன் பொருளாதாரக் கழகம் ஒன்றை உருவாக்கியிருந்தன. அதன் இரண்டாவது மாநாடு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்றது. காஸ்பியன் கடலின் கரைகள் ரஷ்யா, கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், ஈரான் மற்றும் அஜெர்பைஜான் ஆகிய நாடுகளில் அமைந்துள்ளன. இந்தப் பகுதியில் எரிவாயு மற்றும் எண்ணெய் இருப்பு ஏராளமாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தென்கொரியாவோடு இணைந்து கொரியப் பகுதியில் தொடர்ந்து பதற்றத்தை அமெரிக்கா ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் இரண்டு ஏவுகணைகளை ஏவி வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. செப்டம்பர் 25-ஆம் தேதியிலிருந்து இதுவரையில் ஏழு ஏவுகணைகளை வடகொரியா ஏவியிருக்கிறது. 2022-ஆம் ஆண்டில் மட்டும் இதுவரையில் 25 ஏவுகணைகளை வெற்றிகரமாக ஏவி வடகொரியா பரிசோதித்துள்ளது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடைகள் சட்டவிரோதமானவை என்று சீன வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது. அதோடு, இது ஈரானின் உள்விவகாரங்களில் தலையிடும் செயலாகும். அந்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளைக் கொண்டு தடைகளை ஏற்படுத்துவது சரியில்லை என்றும் வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான மாவோ நிங் சாடியிருக்கிறார்.