சென்னை, செப்.16- குறைந்தபட்ச தொகையை (Minimum Balance) காரணம் காட்டி, வங்கிகள் பிடித்தம் எதுவும் செய்யாமல், மகளிர் உரிமைத் தொகை முழுமையாக குடும்பத் தலைவிகளுக்கு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத் துள்ளது. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சனிக்கிழமையன்று (செப். 16) முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: குடும்பத் தலைவியர்க்கு மாதந் தோறும் ரூ. 1000 வங்கிக்கணக்கில் வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15 அன்று தங்களால் துவக்கி வைக் கப்பட்டது. இத்திட்டம் மிகவும் பய னுள்ளதாக இருக்கும் என்று குடும் பத் தலைவியர் தெரிவித்துள்ளனர். வங்கிகள், சேமிப்புப் கணக்கு அல்லது நடப்பு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் குடும்ப தலைவி யர்க்கு அவர்களது வங்கிக் கணக் கில் குறைந்தபட்ச தொகை (Minimum Balance) இல்லா விட்டால் தற்பொழுது தமிழ்நாடு அரசு அவர்களது வங்கிக்கணக் கிற்கு அனுப்பியுள்ள ஆயிரம் ரூபா யிலிருந்து குறைந்தபட்ச தொகை இல்லாததற்கான தண்டத் தொகை யையும், குறுஞ்செய்தி அனுப்பிய தற்கான தொகையையும் வங்கி கள் அவர்களது கணக்கிலிருந்து எடுத்துக் கொள்கின்றன. இதனால் சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவி கள் ஆயிரம் ரூபாயை முழுமை யாக பெற முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. இது அவர்களுக்கு வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தங்களது வங்கிக் கணக்கு களில் குறைந்தபட்ச தொகையை வைக்க முடியாதவர்கள் ஒவ் வொரு மாதமும் இந்த சிரமத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும். இத னால், அரசு வழங்கும் மகளிர் உரி மைத் தொகை முழுமையாக அவர் களுக்கு கிடைக்காமல் போய் விடும். எனவே, தமிழக அரசு வங்கித் துறை அதிகாரிகளுடன் பேசி குறைந்தபட்ச தொகை (Minimum Balance) இல்லை என்கிற கார ணத்தினால் எந்த தொகையும் பிடித்தம் செய்யாமல் மகளிர் உரி மைத் தொகை ரூ. 1000 முழுமை யாக சம்பந்தப்பட்ட குடும்பத் தலை விகளுக்கு கிடைக்கச் செய்திட உட னடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கி றேன். இவ்வாறு கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.