சென்னை, ஆக.30- மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு எதிராக காங்கிரஸ், திமுக, சிபிஎம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து ‘இந்தியா’ எனும் பெயரில் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்தது. இரண்டாவது கூட்டம் பெங்களூ ருவில் நடந்தது. இந்த கூட்டத்தில் தான் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த கூட்டணியின் 3-வது கூட்டம் இரண்டு நாட்கள் மும்பையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவு கள் எடுக்கப்பட்டு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஆக.31) காலை 9.40 மணிக்கு விமானத்தில் மும்பை புறப்பட்டுச் செல்கிறார். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் மும்பையில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கும் அவர், கூட்டம் முடிந்த தும் செப்.1 ஆம் தேதி இரவு சென்னை திரும்புகிறார்.