சென்னை,பிப்.18- தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட செல்வப்பெருந்த கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரி வித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் அறிவிப்பு வெளியாக உள்ள சூழ்நிலை யில், தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தொடங்கி விட்டது. கூட்டணி கட்சிகளு டன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி திமுகவுடன் தனது முதல் கட்ட தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தை முடித்துள்ள நிலையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை விரை வில் தொடங்கப்படவுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழ் நாடு மாநில தலைவராக செல்வபெருந் தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு புதிய தலைவராக நிய மிக்கப்பட்டுள்ள சகோதரர் செல்வ பெருந்தகைக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். அம்பேத்கர் சிலைக்கு மரியாதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி யின் புதிய தலைவர் நியமனம் உடன டியாக அமலுக்கு வருவதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் அறி வித்துள்ளார். இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை அண்ணாமலை புரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.