தில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இணைந்து செவ்வாயன்று 400 மின்சாரப் பேருந்து களை கொடியசைத்து தொடங்கி வைத்த நிலையில், தில்லியில் மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை தற்போது 800 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சர்க்கரை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2017 ஆண்டைக் காட்டிலும் ஒரு மெட்ரிக் டன் சர்க்கரை விலை 3% அதிகரித்து ரூ.37,760-ஆக விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளை சர்க்கரை விலை 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளது.
நாகர்கோவில் அருகே தேரேக்கால் புதூர் பகுதியில் கணவன், மனைவியை கார் வைத்து மோதி கொல்ல முயன்ற வழக்கில், நெல்லை செட்டிகுளம் அதிமுக ஊராட்சி தலைவர் செல்வகுமார் உள்ளிட்ட 2 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது.
சென்னை வடபழனியில் சோழா பைனா ன்ஸ் நிதி நிறுவன இணை பொதுமேலாளர் வீட்டில் 31 சவரன் நகை திருடிய பணிப் பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அறிவிக்கப்படாத கனமழையால் தெலுங் கானா மாநிலத்தின் ஹைதராபாத் மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், புதனன்றும் கனமழை பொழியும் எனவும், அதன்பின்னர் மழை படிப்படியாகக் குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. செவ்வாயன்று கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறு வனங்களுக்கும் விடுமுறை அறிவித்து ஹைதரா பாத் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியப் பங்குச்சந்தைகள் செவ்வாயன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 152 புள்ளிகள் (0.23 சதவீதம்) உயர்வடைந்து 65,780 ஆக இருந்த நிலையில், தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 46 புள்ளிகள் (0.24 சதவீதம்) உயர்ந்து 19,574 ஆக இருந்தது.
இந்த பருவமழை காலத்தில் கர்நாடகாவில் 26 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. இதனால் தெற்கு கர்நாடகா மிக மோசமாக பாதிக் கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மழை இல்லாததால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாக கர்நாடக மாநில வரு வாய்த்துறை அமைச்சர் பைரேகவுடா கூறியுள்ளார்.
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் சென்னை, பாண்டிச்சேரி மண்டல ஆலோ சனை குழு தலைவராக தொழிலதிபர் சேகர் ரெட்டி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.