சென்னை,அக். 11- தஞ்சாவூர் வேளாண்மை கல்லூ ரிக்கு வேளாண் அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் பெயர் சூட்டப் படும் என்று சட்டப்பேரவையில் முத லமைச்சர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிக்கை ஒன்றை முதலமைச்சர் வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
அறிவியல் வளர்ச்சியின் அடையாளம்
வேட்டைச் சமூகமாக இருந்த மனித இனம் வேளாண் தொழிலை தேர்ந்தெடுப்பது என்பது மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பது டன் அறிவியல் வளர்ச்சியின் அடை யாளம் ஆகும். வேளாண் அறி வியல் இருபதாம் நூற்றாண்டில் இந்தி யாவுக்கு ஏற்றவாறு பயன்படுத்தும் பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகர மாக நிகழ்த்திக் காட்டி உலக அளவில் புகழ் பெற்றவர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன். தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சி யில் வேளாண் பல்கலைக்கழகம் நிறு வப்பட்டு, வேளாண் ஆராய்ச்சி மையங்கள் அதிகளவில் உரு வாக்கப்பட்டு, உணவு உற்பத்தியில் புரட்சியும், அதை அனைவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கான செயல்முறைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பங்களிப்பில் அறிவியலாளர் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதனின் ஆலோச னைகளும் இணைந்திருக்கின்றன.
காலநிலை மாற்றமும் எச்சரிக்கையும்
இன்று காலநிலை மாற்றம்தான் பெரிய பிரச்சனையாக மாறிக் கொண்டிருக்கிறது. இதை முன்கூட்டியே உணர்ந்து, காலநிலை மாற்றம் குறித்து 1969 ஆம் ஆண்டில் இந்திய அறிவியல் மாநாட்டில் சுவாமி நாதன் பேசியிருக்கிறார். உலகம் அதிகமாக வெப்பமாவதால் கடல் மட்டம் உயரும் என்பதையும் 1989 ஆம் ஆண்டு டோக்கியோ மாநாட்டில் பேசும் போது எச்சரித்துள்ளார். 2021-இல் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தபோது, அவருடைய பணி களைப் பாராட்டி பேசினேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இன்றைய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை களையும், இந்த அரசை வழி நடத்தும் பொறுப்பை ஏற்றுள்ள முத லமைச்சராகிய என்னையும் அவர் பாராட்டி, வளர்ச்சிக்கான ஆலோச னைகள் வழங்கினார். பசுமைப் புரட்சியின் தந்தை எனப் போற்றப்படும் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் கடந்த மாதம் 28 ஆம் தேதி மறைவுற்ற போது அரசின் சார்பில் அவ ருக்கு இறுதி மரியாதை செலுத்தப் பட்டது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன், இந்திய அளவில் முத்திரை பதித்து, உலக அளவில் புகழ் பெற்றவர். பத்ம விபூஷன், ரமோன் மகசேசே உள்ளிட்ட உயரிய விருதுகள் பெற்றுள்ள அவரது நினை வைப் போற்றும் வகையில், தஞ்சாவூர் மாவட்டம், ஈச்சங்கோட்டையிலுள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இனி டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும்.
ஆண்டுதோறும் விருது
அதேபோல், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியல் பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங் களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னி லை பெறும் மாணவருக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில் ஆண்டு தோறும் விருது வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார். சிபிஎம் வரவேற்பு முதலமைச்சரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகைமாலி, “தமிழ்நாட்டில் பிறந்து உலக அளவில் பாராட்டும் மிகப் பெரும் ஆளுமையாக மாறியவர் எம்.எஸ்.சுவாமிநாதன். உணவு உற்பத்தி யில் மாபெரும் புரட்சியை செய்து காட்டி யவர். பட்டினிச் சாவுகளே இருக்கக் கூடாது என்று கனவு கண்டவர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் விலைப் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்காகவும் குரல் கொடுத்தவர். அத்தகைய அறிவிய லாளருக்கு புகழ் சேர்க்கும் வகையில் முதலமைச்சரின் அறிவிப்புகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுகிறேன்” என்றார். திமுக, அதிமுக,பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் முதல்வரின் இந்த அறிவிப்பை வரவேற்றன.