states

செஸ் ஒலிம்பியாட்: இன்று முதல் பயிற்சி முகாம்

சென்னை,மே 6-  செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் மே 7 அன்று தொடங்கி 17 ஆம்  தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் தொடர் சென்னையை அடுத்த  மாமல்லபுரத்தில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறு கிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியலை அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பாக பங்கேற்கும் ‘ஏ’ பிரிவு அணி வீரர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் இன்று முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அகில இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.  இந்தியாவின் பிரபல செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த், இஸ்ரேல் நாட்டை சார்ந்த கிராண்ட் மாஸ்டர் கெல்ஃபாண்ட் ஆகியோர் வீரர் களுக்கு பயிற்சி அளிக்கின்ற னர்.  இந்திய ‘ஏ’ பிரிவின் பயிற்சி யாளர்களான  ஸ்ரீநாத் நாராய ணன் மற்றும் அபிஜித் குண்டே ஆகியோரும்  முகாமில் பங்கேற் கின்றனர்.