states

5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மேற்குதிசை காற்று வேக மாறு பாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 27, 28ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச் சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 29ஆம் தேதி ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குமரிக்கடல் பகுதி, மன்னார் வளை குடா, தமிழ்நாட்டு கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி களில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை யிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.