states

img

சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செயலாளராக ஜி. செல்வா தேர்வு

சென்னை, அக். 21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய சென்னை மாவட்டச் செய லாளராக ஜி. செல்வா தேர்வு செய்யப் பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்திய சென்னை மாவட்ட 24-ஆவது மாநாடு அக்டோபர் 19-20 தேதிகளில் தோழர்கள் என்.சங்க ரய்யா, சீத்தாராம் யெச்சூரி நினை வரங்கில் (காமராஜர் மாளிகை, அயனா வரம்) நடைபெற்றது.  மூத்த உறுப்பினர் எம்.வி. கிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்தார். கவிஞர் தமிழ் ஒளி நூற்றாண்டு நினைவுக் கண்காட் சியை மூத்த தோழர் பி. சந்திரசேகரன் திறந்து வைத் தார். 3 ஆண்டுகள் நடைபெற்ற போராட்ட காணொலிக் காட்சி திரை யிடலை மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர். முரளி தொடங்கி வைத்தார். பொது மாநாட்டிற்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி. திருவேட்டை தலைமை தாங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் எம். பிரிய தர்ஷினி எம்.சி. வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.முருகேஷ் வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து மாநிலச்செயற்குழு உறுப்பி னர் என். குணசேகரன் பேசினார். பிரதிநிதிகள் மாநாட்டில் நடை பெற்ற பணிகள் மற்றும் அமைப்பு அறிக்கையை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வாவும், நிதிநிலை அறிக்கை யை செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசனும் சமர்ப்பித்தனர். மாநி லக்குழு உறுப்பினர் கே. சுவாமி நாதன் மாநாட்டை வாழ்த்திப் பேசி னார். மத்தியக்குழு உறுப்பினர் பி.  சம்பத் நிறைவுரையாற்றினார். வில்லி வாக்கம் பகுதிச் செயலாளர் எம்.ஆர். மதியழகன் நன்றி கூறினார். புதிய மாவட்டக்குழு 31 பேர் கொண்ட மாவட்டக் குழு தேர்வு செய்யப்பட்டது. செயற்குழு உறுப்பினர்களாக ஜி. செல்வா, சி. திருவேட்டை, இரா. முரளி, இ. சர்வேசன், எஸ்.கே. முரு கேஷ், கே. முருகன், வெ. தனலட்சுமி,  வே. ஆறுமுகம், எஸ்.வி.வேணு கோபாலன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தீர்மானங்கள் இந்தியாவில் ‘கிக்’ பொருளாதாரம் அபரிமிதமாக வளர்ந்து வரும் நிலை யில், ‘கிக்’ (இணையவழி ஆப் மூலம்  பணியாற்றுவோர்) தொழி லாளர்களை, தொழிலாளர்களாக அங்கீகரிக்க வேண்டும்; இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர வேண்டும்; இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதை ஒன்றிய அரசு நிறுத்து வதோடு, சுதந்திர பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் வெளிநாட்டுக் கொள்கையை உறுதியாக கடைப் பிடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.