states

மானாமதுரை: பொதுநிலத்தை போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றம்

சிவகங்கை, மே 31-  மானாமதுரை, கிருஷணராஜபுரம், கீழமேல்குடி ஆகிய கிராம மக்க ளின் பயன்பாட்டுக்கான களமாக இருந்து வருகிறது. இதன் மதிப்பு பல  கோடி ரூபாய் ஆகும். இந்த சொத்து மூன்று கிராம மக்களின் விவ சாய சங்கத்தின் அங்கத்தினர்கள் சோமசுந்தரம் பிள்ளை, நாராய ணசாமி பிள்ளை ,நாராயணசாமி, ராஜா ,ஆறுமுகம், கிருஷ்ணன், கிருஷ்ணன், ராஜாங்கம் ஆகிய ஏழு நபர்கள் பெயர்களில் உரிய ஆவ ணங்களின்படி பட்டா மாறுதல் ஏற்பட்டு விவசாய களமாக இருந்து வருகிறது. இந் நபர்களுக்கு எவ்வித முன்னறிவிப்புமின்றி உரிய ஆவ ணங்களின் மூலம் எதையும் சட்ட முறைப்படி ஆராயாமல் சட்டத்துக்கு  புறம்பாக பத்திரப்பதிவு செய்து பட்டா வழங்கியுள்ளனர் .இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நூற்றுக்க ணக்கானோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர்.