states

பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம்

சென்னை,ஜூன் 22- நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கையில் மாண வர்களுக்கு சமவாய்ப்பு எண் (ரேண்டம்) வழங்கும் போது,  10ஆம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படமாட்டாது என தகவல் வெளியாகி யுள்ளது. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5 ஆம் தேதி தொடங்கி ஜூன் 4 ஆம் தேதி நிறைவடைந்தது. பொறி யியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு சம வாய்ப்பு எண்கள் (ரேண்டம்) வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடை பெறுவது வழக்கம். ஒரே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று இருந்தால் அவர்கள் பெற்ற மதிப்பெண் பிறந்த தேதி அடிப் படையில் முன்னுரிமை அளிக்கப் படும். இந்த நிலையில் 2023-24 ஆம் கல்வியாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் தயாரிக்கும் போது  பத்தாம் வகுப்பு மதிப்பெண் கணக் கிடுவதிலிருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து தமிழ்நாடு உயர் கல்வித்துறை அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. 2021-22 ஆம் கல்வியாண்டில் கொரோனா தொற்று காரணமாக பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தாமல் தேர்ச்சி என்ற அடிப்படையில் மதிப்பெண்கள் சான்றிதழ்கள் வெளியிடப்பட்டதால் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சமவாய்ப்பு எண்  வழங்கும் போது, பத்தாம் வகுப்பு  மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரிவிக்க ப்பட்டுள்ளது.