சென்னை, ஆக.17- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து எல்.வி.எம்.3 எம்4 ராக்கெட்டில், ‘சந்திரயான்-3’ விண்க லம் கடந்த மாதம் 14 ஆம் தேதி நிலவின் தென் துருவ ஆய்வு பணிக்கு வெற்றிகர மாக அனுப்பியது. விண்ணில் ஏவப்பட்ட அன்று புவி வட்ட சுற்றுப்பாதையில் முதல் கட்டமாக 41 ஆயிரத்து 762 கி.மீ. அதிகபட்சமாக வும் குறைந்தபட்சமாக 173 கி.மீ. தொலைவில் சுற்றி வந்தது. அதை படிப் படியாக உயர்த்தும் பணியில் நமது அறிவியலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். அதன்படி கடந்த மாதம் 15 ஆம் தேதி 2வது கட்டமாக அதிகபட்சமாக 41 ஆயிரத்து 603 கி.மீ. தொலைவிலும், குறைந்தபட்சம் 226 கி.மீ. தொலைவில் சுற்றி வந்தது. தொடர்ந்து 3-வது கட்டமாக அதிகபட்சமாக 71 ஆயிரத்து 351 கி.மீ., குறைந்தபட்சம் 233 கி.மீ. சுற்றுப்பாதையில் பயணித்து வந்தது. இப்படி படிப்படியாக உயர்த்தப் பட்டு வந்த விண்கலம், இம் மாதம் 1 ஆம் தேதி நிலவு வட்ட சுற்றுப்பாதை யில் குறைந்தபட்சம் 288 கி.மீ. தொலை விலும், அதிகபட்சம் 3 லட்சத்து 69 ஆயிரத்து 328 கி.மீ. தொலைவில் சுற்றி வந்தது. இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையில் குறைந்தபட்சம் 164 கி.மீ., அதிகபட்சம் 18 ஆயிரத்து 74 கி.மீ. என்ற அளவில் உயரம் குறைக்கப்பட்டது.
தொடர்ந்து மீண்டும் உயரம் குறைக்கும் பணியில் குறைந்தபட்சம் 170 கி.மீ., அதிகபட்சம் 4 ஆயிரத்து 313 என்ற அளவில் சுற்றி வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 9 ஆம் தேதி மீண்டும் உயரம் குறைக்கப் பட்டது, குறைந்தபட்சம் 174 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 1,437 கி.மீ. தொலைவிலும் பயணித்தது. தொடர்ந்து கடந்த 14 ஆம் தேதி உயரம் குறைப்பு பணியில் குறைந்த பட்சம் 151 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 179 கி.மீ. என்ற சுற்றுப்பாதையில் சுற்றி வந்தது. மீண்டும் அதன் உயரம் குறைக்கப் பட்டது. அதன்படி குறைந்தபட்சம் 153 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சம் 163 கி.மீ. என்ற அளவில் சுற்றி வருகிறது. தற்போதைய நிலையில், ‘சந்திர யான்-3’ 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலவு அடுக்குக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிலையில் திட்டமிட்டபடி ஆக. 23 ஆம் தேதி மாலை 5.47 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விண்கலம் தரையிறங்க இருக்கிறது. இதனையொட்டி, விண்கலத்தில் உள்ள உந்துவிசை தொகுதியில் இருந்து தரையிறங்கும் லேண்டரை (புரோபல்ஷன் மோடில் இருந்து லேண்டர் மோடில்) தனியாக பிரிக்கும் நடவடிக்கையில் வியாழனன்று (ஆக.17) ஈடுபட்டனர். இந்தப் பயணம் வெற்றி பெற்றது. அதன்பிறகு இரண் டும் தனித்தனி பயணத்தை தொடங்கி யது.