சென்னை, மே 15- தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்க ளில் மூன்று நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக் கிறது. தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் மே 16 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைபெய்யக் கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திரு நெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மே 17, 18 ஆம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை மைய இயக்குநர் செந்தாமரைக் கண்ணன் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் பெய்து வரும் மழை யால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள் ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 7ஆயிரத்தி 666 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை யின் நீர்மட்டம் 107 அடியாக உள்ளது.