சென்னை,ஜூன் 30- தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் செவ்வாய்கிழமை கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல்,கரூர்,திருச்சி.பெரம்பலூர், கள்ளக் குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத் துடன் காணப்படும் நகரின் சில இடங்கள் லேசான மழை பெய்யக்கூடும். அதிக பட்ச வெப்ப நிலை 39 முதல் 40 செல்சியஸ் வரை காண ப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.