states

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கு மத்தியப் பாதுகாப்பு!

சென்னை,பிப்.3- ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்த லில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கி ரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவெரா  வெற்றி பெற்றார். இவர் மாரடைப் பால் மரணமடைந்தார். இதனால், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. திமுக தலை மையிலான மதச்சார்பற்ற முற்போக்கு  கூட்டணியில் காங்கிரஸ் கட்சியே மீண்டும் போட்டியிடுகிறது. வேட்பாளராக திருமகன் ஈவெரா வின் தந்தை ஈவிகேஎஸ். இளங்கோ வன் போட்டியிடுகிறார். இந்த தேர்தலையொட்டி பிப்ரவரி 13ஆம் தேதி முதல் மத்திய ஆயுதப்படை காவல் துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.