states

உணவகங்களில் சிசிடிவி கேமரா சாத்தியமற்றது: நீதிமன்றம்

சென்னை, நவ.8- சுத்தமான, தரமான உணவு சமைக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அனைத்து உணவ கங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் எஸ்.நடராஜன் என்பவர்  தாக்கல் செய்த பொது நல மனுவில்,  “கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழ கத்தில் உள்ள உணவகங்களில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும்  தர ஆணையம் ஆய்வு நடத்தியது.  இந்த ஆய்வில் 12 விழுக்காட்டிற் கும் மேலான உணவகங்கள் போது மான அளவு தரத்துடன் செயல்பட வில்லை என்பது தெரியவந்துள்ளது. பல உணவகங்களின் சமைய லறைகள் சுகாதாரமற்ற முறையில்  இருக்கின்றன. உணவு தயாரிக்கும் போது உரிய சுத்தமான நடைமுறை கள் பின்பற்றப்படுவதில்லை. எனவே அனைத்து வகையான  உணவகங்களின் சமையலறைகளி லும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். உணவு சமைப்பதை வாடிக்கையாளர் பார்க்கும் வகையில் தொலைக்காட்சி வைக்க வேண்டும்” என்று கோரியிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா நீதிபதி டி.கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து தீர்ப்பளித்தது. அதில், பெரிய நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை பல உணவகங்கள் செயல் பட்டு வரும் நிலையில், மனுதாரரின் கோரிக்கை சாத்தியம் இல்லை எனக்கூறி தள்ளுபடி செய்தனர்.