states

நாமக்கல் இளம்பெண் படுகொலை : சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடுக!

சென்னை,மே 11- நாமக்கல்லில் இளம்பெண் படு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற கட்சி யின் மாநிலக்குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், வடகரையாத்தூர் ஊராட்சி, கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் மனைவி கடந்த 11.3.2023 அன்று ஆடு  மேய்க்கச் சென்றவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த படுகொலை யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த வழக்கில் அப்பகுதியில் ஆலைக்கொட்டகையில் வேலை பார்த்து வந்த 17வயது சிறுவன் ஒரு வனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  இந்த கொடூரமான பாலியல் வன்புணர்வு படுகொலையை ஒரு சிறுவனால் மட்டுமே செய்திருக்க முடியாது என அப்பகுதி மக்களி டையே பெரும் சந்தேகம் உருவாகி உள்ளது. உண்மை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டு மெனவும், இவ்வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றிட வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனே தலையிட்டு மேற்கண்ட வழக்கினை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்திட வேண்டுமெனவும், படுகொலை செய்யப்பட்டவரின் குழந்தைகளின் எதிர்கால வாழ்வினை பாது காப்பதற்கு உரிய நிவாரணமும் வழங்கிட வேண்டுமென்று சிபிஎம்  மாநி லக்குழு கேட்டுக் கொள்கிறது. மேலும் அப்பகுதியில் பொது அமைதி நில விட வருவாய் துறை மூலம் உரிய நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.