முதுநிலை மருத்துவ மாணவி சுகிர்தா (26) மர்மமான முறையில் அக்டோபர் 6-ஆம் தேதி தனது அறையில் இறந்து கிடந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை ஞாயிறன்று தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பு படித்து வந்த முதுநிலை மாணவி கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்தனர். பொதுமக்களும், மாணவர் களும் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி களைக் கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், இந்த வழக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராஜ்குமார், காவல் ஆய்வாளர் பார்வதி தலைமை யிலான அதிகாரிகள் கல்லூரிக்கு வருகை தந்து விசாரணையைத் தொடங்கினர். நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப் பட்டுள்ள பிரதானக் குற்றவாளி பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள இருவரைத் தேடி வருகின்றனர்.