states

மீண்டும் சூடுபிடிக்கும் கொலை, கொள்ளை வழக்கு: கோட நாட்டில் சிபிசிஐடி ஏடிஜிபி ரகசிய விசாரணை

சென்னை, டிச.26- கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள் ளது. சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள அபய்குமார் சிங் ரகசி யமாக கோடநாடு சென்று விசாரணை நடத்தி யுள்ளார். தமிழக முதல்வராக இருந்த ஜெய லலிதா கடந்த 2016 இல் காலமானார். இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்திலுள்ள கோடநாடு எஸ்டேட் அவரது தோழியான சசிகலா உள்ளிட்டோரின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்த நிலையில், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு,2017 ஏப்.24 ஆம் தேதி கோட நாடு எஸ்டேட்டிலிருந்து விலை உயர்ந்த பொருட்கள், ஆவணங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். அப்போது, அவர் களை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பக தூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஜெய லலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜிடம் விசா ரணை நடத்த காவல்துறையினர் ஆயத்த மான நிலையில், அவர் சாலைவிபத்தில் உயி ரிழந்தார். சம்பவத்தில் தொடர்பு இருப்ப தாக கூறப்பட்ட கேரளாவை சேர்ந்த சயான், வாழையாறு மனோஜ் ஆகியோரை காவல்துறையினர்

தேடிய நிலையில் கேர ளாவில் குடும்பத்துடன் சாலை விபத்தில்  சிக்கினார் சயான். இதில் அவரது மனைவி,  மகள் உயிரிழந்தனர். தொடர்ந்து, கோட நாடு பங்களாவில் கணினி ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்ப வங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த வழக்கு கடந்த செப்டம்பரில் சிபி சிஐடிக்கு மாற்றப்பட்டது. அப்பிரிவின் டிஜிபியாக இருந்த ஷகில் அக்தர் கடந்த  அக்.31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.  அதன்பிறகு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டார். அவ ரது நேரடி மேற்பார்வையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில், கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் மிக ரகசியமாக கோடநாடு சென்று 2 நாட்கள் அங்கு தங்கியிருந்து விசாரணை நடத்தியுள்ளார். பிறகு, சிபிசிஐடி ஐ.ஜி. தேன்மொழியும் 10 நாட்கள் அங்கு தங்கி விசாரணை நடத்தியுள்ளார். கோடநாடு வழக்கில் இதுவரை விசா ரணை நடத்திய காவல்துறை அதிகாரிகளி டம் தனியாக அறிக்கை கேட்டுப் பெறப் பட்டுள்ளது. சேலம், தருமபுரி, கோவை பகுதிகளில் வழக்கு விசாரணையில் கை  தேர்ந்த காவலர்களின் பட்டியல் சேகரிக்கப்  பட்டு, அதிலிருந்து 10 உதவி ஆய்வாளர்கள் உட்பட 34 காவலர்கள் தனிப்படையில் கூடு தலாக சேர்க்கப்பட்டுள்ளனர்.