காவிரி விவகாரம்: ஒழுங்காற்றுக்குழு நாளை கூடுகிறது
புதுதில்லி, நவ. 21 - காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு பரிந்து ரைகளை வழங்கும் மற்றும் காவிரி ஆணைய உத்த ரவுகளை மாநில அரசுகள் செயல்படுத்துகின்றனவா, என்பதைக் கண்காணிக்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழு வின் கூட்டம் நவம்பர் 23 அன்று நடைபெற உள் ளது. இதில் தமிழ்நாடு, கர்நாட கம், கேரளம், புதுச்சேரி மாநி லங்களைச் சேர்ந்த பிரதிநிதி கள் கலந்துகொள்கின்றனர்.
மாணவர்கள் தற்கொலைக்கு நெருக்கடியே காரணம்
புதுதில்லி, நவ. 21 - புற்றீசல் போல அதி கரித்து வரும் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று மும்பையைச் சேர்ந்த டாக்டர் அனிருதா நாராயண் உச்ச நீதிமன்றத்தில் மனு த்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதி பதிகள், “பயிற்சி வகுப்புகள் செல்லவேண்டிய நிலைக்கு பெற்றோரின் நெருக்கடி தான் காரணமாக இருக்கும் போது, இதில் நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடி யும்?” என்று கேள்வி எழுப்பி யுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் ஒன்றிய அர சைத்தான் அணுகவேண்டும்’’ என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மன்சூர் அலிகானுக்கு பாரதிராஜா அறிவுரை
சென்னை, நவ. 21 - நடிகை திரிஷா உட்பட சக நடிகைகளை, நடிகர் மன்சூர் அலிகான் மலின மான முறையில் பேசிய விஷயம் கண்டனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது. இந்நிலையில், ‘அவர் பேசியது தவறு. எனது நன்நி லையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது’ என்று பாதிக்கப் பட்ட பெண்ணாக அவர் (நடிகை திரிஷா) குரல் எழுப்பியுள்ள நிலையில், தானாக முன்வந்து மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறை யற்ற செயல். மன்சூர் அலி கான் மன்னிப்பு கேட்டு இப் பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல்! என்று தமிழ்த் திரைப் படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் பாரதிராஜா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். “பெண் கள் சுயமாக வெளியே வந்து உழைப்பில் முன்னேற நினைக்கும் காலம் இது. அவர்களைப் பற்றி யார் இழி வாகப் பேசியிருந்தாலும் கண்டிக்கத்தக்கது” என்றும் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.