சென்னை, அக்.9- காவிரி நதி நீரில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும் வகை யில் முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் தனி தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் சட்டமன்ற கட்சி தலைவர் நாகை மாலி வர வேற்று பேசியது வருமாறு:- ஒட்டுமொத்தமாக 800 கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்கும் காவிரி ஆறு வங்கக் கடலில் கலக்கிறது. இதில் 420 கி.மீ தமிழ் நாட்டில் மட்டும் பாய்கிறது. 320 கி. மீட்டர் கர்நாடகாவில் பாய்கி றது. 60 கிலோ மீட்டர்தான் தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் பாய்கிறது. ஆகவே, காவிரியில் கர்நாடகத்தைவிட தமிழ்நாட் டிற்கு தான் கூடுதல் சொந்த மாகும். சமீபகாலமாக காவிரி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு கிடைப்பதில் அதில் டெல்டா மாவட்டங்களுக்கு கிடைப்பதில் மிகப்பெரிய சிக்கல் உருவாகியிருக்கிறது. குறிப்பாக தண்ணீரை வழங்க வேண்டிய கர்நாடக அரசும், அதை உறுதி யாக பெற்றுத் தரவேண்டிய ஒன்றிய பாஜக அரசும் கேடு விளைத்திருக்கும் காட்சிகள் அரங்கேறிக்கொண்டு வருவதை பார்க்கிறோம். நமது முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கும் ஏராளமாக கடிதங் களை எழுதியிருக்கிறார். தமிழ் நாட்டின் நீர்வளத்துறை அமைச்சர் தலைமையில் சென்ற நமது மக்க ளவை உறுப்பினர்கள் அனை வரும் ஒன்றிய அமைச்சரை சந்தித்து பேசியிருக்கிறார்கள். உச்சநீதிமன்றம், காவிரி மேலா ண்மை வாரியம் நமக்கு ஆதர வாக உத்தரவு பிறப்பித்தி ருக்கிறது. இவ்வளவுக்கு பிறகு, எது நடந்தால் காவிரியில் தமிழ்நாட் டிற்கு உள்ள உரிமை கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக மாறி யுள்ளது. இதனால், டெல்டா மாவட்ட விவசாயிகள் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது. குறுவை விவசாயம் முற்றிலும் அழியும் நிலையில் இருக்கிறது. சம்பா விவசாயம் செய்வது எப்படி? என்று விவசாயிகள் திகைத்துக் கொண்டிருக்கிறார். மழை இல்லை, காவிரி தண்ணீர் கிடைக்கவில்லை என்கிற நிலையில் விவசாயப் பணிகளை மேற்கொள்வது எப்படி? என்கிற மிகப்பெரிய கவலையுடன் விவ சாயிகள் வாழ்ந்து கொண்டி ருக்கிறார். ஆகவே, இதற்கெல்லாம் காரணம், காவிரி உரிமையை தமிழ்நாட்டிற்கே பெற்றுத்தரும் உறுதியோடு ஒன்றிய அரசு, செயல்படவில்லை. அதன் விளைவுதான் நமக்கு உரிய தண்ணீர் கிடைக்கவில்லை என்பதை முதலமைச்சர் கொண்டு வந்திருக்கும் தீர்மானம் அழுத்தம் திருத்தமாக சொல்கிறது. எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் டெல்டா மக்கள் சார்பில் மனதார வரவேற்கிறேன்.