சென்னை, ஆக.28-
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் சில நாள்களுக்கு முன்பு பள்ளி மாணவரும், அவரது சகோதரியும் சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பலதரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சனையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்த நிலையில் சிவகங்கையில் அரசு கலை மற்றும் கல்லூரி பேராசிரி யர் கிருஷ்ணன், மாணவர்களிடையே சாதிய பாகுபாடு ஏற்படுத்தும் வகை யில் செயற்பட்டதாக மாவட்ட ஆட்சியரி டம் மாணவர்கள் புகார் அளித்தனர். இது தொடர்பான விசாரணையில் மாணவர்க ளின் புகார் உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சாதி பாகுபாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக 3 பேராசிரியர்கள், பணியிட மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிடப் பட்டுள்ளது.
அதன்படி, வியாசர்பாடி கல்லூரி பேராசிரியர் ரவி மயிசின், சிவகங்கை கல்லூரி பேராசிரியர் கிருஷ்ணன், கும்பகோணம் கல்லூரி பேராசிரியர் சரவண பெருமாள் ஆகியோர் நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.