திருப்பூர், ஆக.10– காங்கேயம் அருகே குத்தகை விவ சாயியின் வீட்டை சாதி ஆதிக்க கும்பல் இடித்தது தொடர்பான வழக்கில் அதி முக முன்னாள் எம்எல்ஏ., காங்கேயம் நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். காங்கேயம் அருகே ஆலாம்பாடி ஊராட்சி நெய்க்காரன்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.சி.சிவா. குத்தகை விவ சாயி. ஊர் புறம்போக்கு நிலத்தில் கடந்த 14 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டுக்கு அருகில் இருக்கும் சுப்பிரமணி என்பவர் தனது வீட்டை விரிவுபடுத்திக் கட்ட வேண்டும் என்று சொல்லி, சிவாவை குடியிருக்கும் வீட்டில் இருந்து காலி செய்யும்படி வற்புறுத்தினார். அத்துடன் கடந்த சில மாதங்களாக சாதி ஆதிக்க கும்பல் பின்புலத்துடன் ஊர்க்கூட்டம் என்ற பெயரில் ஐந்தாறு முறை கூட்டம் நடத்தி, சிவா குடும்பத்தாரை அங்கி ருந்து வெளியேற்ற முயன்றனர். சிவா குடியிருக்கும் வீட்டை காலி செய்ய மறுத்த நிலையில், செவ்வா யன்று இரவு 11 மணியளவில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ், திமுகவை சேர்ந்த காங்கேயம் நகர்மன்றத் தலைவர் சூர்யபிரகாஷ் ஆகியோர் தூண்டுதலில் சுமார் 50 பேர் கொண்ட கும்பல் அவரது வீட்டை இடித்தனர்.
அப்போது சிவா குடும் பத்தார் காங்கேயத்தின் தங்கள் மகன் வீட்டிற்குச் சென்றிருந்தனர். தகவ லறிந்து காவல் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றதை அடுத்து அந்த கும்பல் அங்கிருந்து கலைந்து சென் றது. இதுகுறித்து சிவா காங்கேயம் காவல் நிலையத்தில் புதனன்று காலை அதிமுக முன்னாள் எம்எல்ஏ என்.எஸ்.என்.நடராஜ், காங்கேயம் நகர்மன்றத் தலைவர் சூர்யபிரகாஷ் உள்ளிட்டோர் மீது புகார் தெரிவித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் என்.எஸ்.என்.நடராஜ், சூர்யபிரகாஷ், சுப்பிரமணி, தினேஷ்குமார், விஜயகுமார் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். முன்னதாக மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சாமிநாதன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார். இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் 143 சட்ட விரோதமாக கூடுதல், 147 கல கம் செய்தல், 148 பயங்கர ஆயுதம் அல்லது மரணத்தை உண்டாக்கும் ஆயு தத்தை வைத்திருத்தல், 427 சொத்திற்கு சேதம் விளைவித்தல், 457 அத்துமீறி வீட்டிற்குள் நுழைதல், பொதுச் சொத்து களுக்கு சேதம் விளைவிப்பதைத் தடுக்கும் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பல்வேறு பொது நல அமைப்புகள் சார்பில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்கா ணிப்பாளருக்கு வியாழனன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் பணபலம், அதிகாரபலம் கொண்டவர்கள் என்பதால் சிவாவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கோரியுள்ளனர்.