states

தீக்கதிர் விரைவு செய்திகள்

எண்ணூர் வாயு கசிவு:  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு

சென்னை, டிச.29 - எண்ணூர், பெரிய குப்பத்தில் உள்ள தனியார் உரத் தொழிற்சாலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமோ னியா வாயு கசிவு ஏற்பட்டது. இதனால்  மூச்சு திணறல், மயக்கம் என கடுமை யாக பாதிக்கப்பட்ட அப்பகுதியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த அமோனியா வாயு கசிவின் தாக்கம் சுற்றியுள்ள சுமார் 10-க்கும்  மேற்பட்ட மீனவ கிராமத்தில் இருந்தது.  இதனால் கோபமடைந்த பொதுமக்கள்  உரத்தொழிற்சாலை முற்றுகையிட்ட னர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட நெட்டு குப்பத்தைச்  சேர்ந்த ராஜேந்திரன், தாழம் குப்பத் தைச் சேர்ந்த முரளி, வெங்கடேசன், பார்த்தசாரதி உள்பட 16 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் தொழிற்சாலை முன்பு அனுமதி பெறாமல் பந்தல் அமைத்து, ஒலிபெருக்கி வைத்த எண்ணூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ், சுதாகர் ஆகிய 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே தொழிற்சாலை முன்பு தொடர்ந்து 3-வது நாளாக  மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னையில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழப்பு

சென்னை, டிச.29 - கொரோனா தொற்று கடந்த 2019 ஆம்  ஆண்டு உலக நாடுகள் முழுவதும் பரவியது. இந்த தொற்று தமிழ்நாட்டில் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதி யில் ஊடுருவியது. ஆனால், தமிழ் நாட்டில் பாதிப்பு அதிகரித்து வந்தது. அதன்பின், கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்தது. தொடர்ந்து, கொரோனாவுக்கு தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு படிப்படியாக கொரோனாவை கட்டுக் குள் கொண்டு வந்தது. இதையடுத்து, மீண்டும் உருமாறிய புதிய வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. உருமாறிய கொரோனா பாதிப்பு வேகமாக பரவ தொடங்கியுள்ளது. அதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்து வருகி றது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களாக கொரோனா பாதிப்பில் தமிழ்நாட்டில் எந்த உயிரிழப்பும் ஏற்படாமல் இருந்தது. இந்நிலையில், வியாழக்கிழமை (டிச.28) சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி (55) என்பவர் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் 158 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப் பட்டதில் 23 பேருக்கு உறுதி செய்யப் பட்டது. சென்னையில் 16 பேர், கோவை யில் 3 பேர், நீலகிரி, ராணிப்பேட்டை, சேலம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங் களில் தலா ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது. இந்த தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை, டிச.29 - பொங்கல் மற்றும் தொடர்ந்து வரும் விழாக்களை முன்னிட்டு, பயணி கள் நலனுக்காகவும், கூட்ட நெரிசலை தடுக்கவும் சென்னை எழும்பூர்- நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.    இது குறித்து தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- வரும் ஜனவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப் பட்டு நாகர்கோவில் நோக்கி செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் (வண்டி எண்.06067) அதே நாள் மதியம்  2.10 மணிக்கு நாகர்கோவில் சென்ற டையும். மறுமார்க்கமாக, வரும் ஜனவரி மாதம் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் செல்லும் வந்தே பாரத் வாராந்திர சிறப்பு ரயில் (06068) அதே நாள் இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.