பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை யுஜிசி-நெட் தேர்வு!
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வை (யுஜிசி-நெட் தேர்வு) தேசியத் தேர்வு முகமை நடத்துகிறது. இதன்படி நடப்பாண்டுக்கான யுஜிசி-நெட் தேர்வுக்கு டிசம்பர் 29 முதல் 2023 ஜனவரி 17-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் 2023 பிப்ரவரி 21 முதல் மார்ச் 10-ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கணினி அடிப்படையில் 83 பாடங்களுக்கு உதவிப் பேராசிரியர் தேர்வு நடத்தப்படும் என்று யுஜிசி தலைவர் எம். ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். யுஜிசி-நெட் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பிரக்யா சிங் தாக்குர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு?
“லவ் ஜிகாதிகளிடம் (முஸ்லிம்களிடம்) இருந்து நம் இந்து மகள்களை பாதுகாக்க வேண்டும். வீட்டில் எப்போதும் கூர்மையான ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும். அது இல்லை என்றால் காய்கறி நறுக்க வைத்துள்ள கத்திகளை கூர்மையாக்கி வைத்துக்கொள்ளுங்கள்” என்று மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளியும், பாஜக எம்.பி.யுமான பிரக்யா சிங் தாக்குர் மதவெறியைத் தூண்டியிருந்தார். இவர் மீது காங்கிரஸ் பிரமுகர் அளித்த புகாரின் பேரில் ஐபிசி 153ஏ- பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், பிரக்யா சிங் தொடர்ந்து வெறுப்பை விதைத்து வருவதால், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கரை ஒதுங்கிய நான்கு தமிழக மீனவர்கள்
கொழும்பு, டிச.29- மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இலங்கையில் உள்ள வல்வெட்டித் துறை கடற்பகுதியில் கரை ஒதுங்கியுள்ளனர். அவர் களை இலங்கையிலுள்ள பருத்தித்துறை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டை யைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் (டிச.28) நள்ளிரவு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் தமிழக மீனவர்கள் விரித்திருந்த வலை யை அறுத்துள்ளனர். இதையடுத்து தமிழக மீனவர்கள் துரத்தி யுள்ளனர். அப்போது அவர்களது இயந்திரப் படகு பழுதடைந்துள்ளது. இதையடுத்து அவர்கள் வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்திய இலங்கை காவல்துறையினர் நான்கு மீனவர்களையும் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
கைப்பந்து வீரர் உடல் அடக்கம்
திருவள்ளூர்,டிச.29- திருவள்ளூரை அடுத்த கைவண்டுர் கிராமத்தைச் சேர்ந்த கைப் பந்து வீரர் ஆகாஷ். இவர் நேபாளத்தின் போக்ரா நகரத்திலுள்ள ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடை பெறும் பேட்டியில் கலந்து கொள்ள கடந்த 21 ஆம் தேதி சென்றிருந்தார். நேபாளத்துடன் நடந்த முதல் ஆட்டத்தின் முதல் சுற்றில் வெற்றி பெற்ற தும் ஓய்வு எடுக்க ஆகாஷ் தனது அறைக்கு சென்றார். அப்போது திடீரென உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். பிறகு, ஆகாஷின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இதை யடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேபாளத்திலிருந்து ஆகாஷ் உடலை கொண்டு வர தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆகாஷின் உடல் பிரேத பரிசோ தனை முடிந்து நேபாளத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு புதனன்று(டிச.28) இரவு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரான கைவண்டுர் கிராமத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக் காக ஆகாசின் உடல் வைக்கப்பட்டது. அமைச்சர் சா.மு.நாசர், எம்.எல்.ஏ.க் கள் சந்திரன், ஜோசப் சாமுவேல் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர், கைவண்டுரில் ஆகாஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
சீனாவிலிருந்து கோவை வந்தவருக்கு கொரோனா
சென்னை,டிச.29- சீனாவிலிருந்து கோவை விமான நிலையம் வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த அந்த நபர் சேலம் சுகாதார துறையினர் கண்காணிப்பில் உள்ளார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 23 ஆம் தேதி முதல் டிச.28 வரை வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளில் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி யாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதி கரித்துள்ள நிலையில் இந்தியாவிற்கு வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் வரும் பயணிகளுக்கு ரேண்டம் அடிப் படையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக கோவை சர்வதேச விமான நிலை யத்திற்கு கடந்த 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை 9 சர்வதேச விமானங்கள் வந்துள்ளன. இதில் 1357 பயணிகள் வந்துள்ள நிலையில், ரேண்டம் அடிப்படையில் 64 பயணிகளுக்கு சோதனை செய்யப் பட்டுள்ளது. இதில் சேலத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கோவை மாவட்ட நிர்வா கம் தெரிவித்துள்ளது. சேலத்தைச் சேர்ந்த பயணி சீனாவில் இருந்து சிங்கப் பூர் வழியாக கோவை வந்துள்ளார். நேற்று முன் தினம் சிங்கப்பூரில் இருந்து வந்த அவருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது. அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சேலம் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு, தற்போது அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவை விமான நிலையத்திற்கு சார்ஜா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளி லிருந்து தினமும் இரு விமானங்கள் கோவை வந்து செல்வது குறிப்பிடத் தக்கது.
முதன் முறையாக பாபநாசத்தில் வெல்லம் ஏலம்
தஞ்சாவூர், டிச.29- பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தமிழ கத்திலேயே முதன்முறையாக வெல்லம் ஏலம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சு வெல்லத்தை திண்டுக்கல் மாவட்டம், நெய்காரப்பட்டி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள வெல்ல மண்டிகளில் தனியார் வியாபாரிகளிடம், விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர். ஆனால், அதற்கான உரிய விலை கிடைப்பதில்லை எனவும், தமிழக அரசே அச்சு வெல்லத்தை கொள்முதல் செய்ய வேண்டும், அதனை, தஞ்சாவூர் மாவட்டத்திலேயே விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண் டும் என கோரிக்கை விடுத்தனர். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலேயே முதன் முறையாக தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திலுள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் வியாழக் கிழமையில் ஏலம் விடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. அதன் படி, டிச.29 அன்று தொடக்க நிகழ்வு அங்கு நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் எச்.ஜவாஹிருல்லா ஏலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஏலத்தில் பாப நாசம், அய்யம்பேட்டை, இலுப் பக்கோரை, கணபதிஅக்ரகா ரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி யிலிருந்து 21 விவசாயிகள், 2130 கிலோ வெல்லத்தை கொண்டு வந்தனர். இதில் திருச்சி, பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பகுதியிலிருந்து 10 வியாபாரிகள் கலந்து கொண்டனர். 30 கிலோ கொண்ட 1 சிப்பத்திற்கு அதிகபட்சமாக ரூ. 1200-ம், குறைந்தபட்சமாக ரூ. 900-ம், சராசரியாக ரூ.1150 என விலை ஏலம் தொகையாக கேட்கப்பட்டது.
புதுச்சேரியில் 12 ஆண்டுகளில் கடலில் மூழ்கிய 186 பேர் உயிரிழப்பு
புதுச்சேரி,டிச.29- புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டு மகிழ்வது கடற்கரையை தான். இந்த கடற்கரையில் இயற்கையாக மணல் நிறைந்த மணல் பரப்பு இல்லை. கடல் அரிப்பை தடுத்து, செயற்கை மணல்பரப்பை உருவாக்க ஒன்றிய அரசின் புவி அறிவியல் அமைச்சகம் மற்றும் தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து ரூ.25 கோடியில் நவீன தொழில்நுட்பத்தில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டது. புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுக முகத் துவாரத்தில் சேர்ந்துள்ள மணலை அள்ளி தூர்வாருவதற்காக விசாகப் பட்டினத்திலுள்ள ஒன்றிய அரசின் ‘டிரஜ்ஜிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ நிறுவனத்துடன் புதுச்சேரி துறைமுகம் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்தது. இப்பணி, ரூ.14.89 கோடி செலவில் நடந்தது. இதனால் புதிய கடற்கரை மணல் பரப்பு உருவானது. கடந்த 2018 இல் இப்பணி நடந்தது. அதன்பின்னர் சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும்போது பலியாவது அதிகரித் துள்ளது. குறிப்பாக, கடலின் ஆழம், சீற்றம் தெரியாமல் அழகை ரசித்தப்படி கடலில் மூழ்கி வெளிமாநிலத்தவர் உயிரிழப்பது புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளில் 186 பேர் உயிரிழந்துள்ளனர். நடப்பாண்டில் 18 பேர் வரை பலியாகியுள்ளனர். ஆனால் அரசு தரப்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் போதிய அளவில் ஏற்படுத்தவில்லை. கடலில் சிக்கியோரை மீட்க நடவடிக் கையும் இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொங்கல் சிறப்பு ரயில் டிக்கெட் 7 நிமிடங்களில் விற்று தீர்ந்தன
சென்னை,டிச.29- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில் சேவைகளும் நிரம்பி விட்டதாக தகவல் வெளி யாகியுள்ளது. முன்பதிவு தொடங்கிய அன்றே அனைத்து பயணசீட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாக கூறுகின்றனர். இதனால், பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு ரயில்சேவை குறித்த தகவலுக்காக மக்கள் காத்திருந்தனர். இந்நிலையில், தாம்பரத்திலிருந்து நெல்லை, தாம்பரத்திலிருந்து நாகர்கோவில், கொச்சுவேலியிலிருந்து தாம்பரம் வரை, எர்ணாகுளத்திலிருந்து சென்னை சென்ட்ரல் வரை என பத்து சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த ரயில்காண சேவை வியாழனன்று (டிச.29) காலை 8 மணியிலிருந்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சிறப்பு ரயில் சேவைக்கு முன்பதிவு செய்வ தற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பலர் காத்திருந்தனர். அதிகாலையிலிருந்து காலை 8 மணிக்கு துவங்கும் முன்பதிவுக்காக கவுண்டர் திறக்கும் வரை காத்திருந்தனர். ஆனால், காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களிலேயே சிறப்பு ரயில் சேவை களுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்தது. பெரும்பாலானோர் ஆன்லைனிலேயே சிறப்பு ரயிலுக்காக டிக்கெட்டுகளை எடுத்து விட்டதால் கவுண்ட ரில் காத்திருந்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், சொந்தஊரிற்கு செல்ல ஆர்வ மாக இருந்த மக்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.