states

தேர்தல் பத்திரங்களுக்கு எதிரான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம்!

புதுதில்லி, அக். 16 - அரசியல் கட்சிகள் கணக்கில் காட்டாமல் பல ஆயிரம் ரூபாய் கோடி களை நன்கொடையாக பெறுவதற்கு வழிவகை செய்யும் ‘தேர்தல் பத்திரங்களுக்கு’ எதிரான வழக்குகள், 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவித்துள்ளார். கார்ப்பரேட் பெருமுதலாளிகளிட மிருந்து, கணக்கு வழக்கின்றி, நன் கொடைகளை பெறுவதற்கு தோதாக,  ஒன்றிய பாஜக அரசானது, தேர்தல் பத்திரங்கள் நிதிச் சட்டத்தை, கடந்த  2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தி யது. இதற்காக ரிசர்வ் வங்கிச் சட்டம், வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகிய மூன்று சட்டங்களைத் திருத்தியது.  தேர்தல் பத்திரங்கள் நிதிச் சட்டத்தை, நிதி மசோதாவாக தாக்கல் செய்து, மாநிலங்களவையின் ஒப்புதல் தேவைப்படாமலேயே மோடி அரசு சட்ட மாக்கியது. அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மூலம் தேர்தல் நிதி வழங்கு வதற்கான தேர்தல் பத்திரங்களை வெளியிடும் முறையை கொண்டு வந்தது. அப்போது முதல் தேர்தல் பத்தி ரங்கள் மூலம் நிதி பெறும் கட்சிகளில் பாஜக-வே முதலிடத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், யார் தருகிறார் கள் என்பதை தெரிவிக்க வேண்டிய அவசியமில்லாமலேயே, இப்போது வரை பல ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாக பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. கடந்த 2022 டிசம்பரில் இந்த வழக்குகள் விசார ணைக்கு வந்தபோது, தற்போது தேர்தல் எதுவும் நடைபெறப் போவ தில்லை என்பதால் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை முடிந்து 2023 ஜனவரி கடைசி வாரத்தில் விசார ணைக்கு எடுத்துக் கொள்வதாக தலை மை நீதிபதி அமர்வு தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே, இந்த வழக்கு கள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும் என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அறிவித்துள்ளார். “பிரச்சனையின் முக்கியத்துவ த்தைக் கருத்தில் கொண்டு, இந்திய அர சியலமைப்புச் சட்டத்தின் 145(4) பிரி வின்படி, இந்த விவகாரம் குறைந்த பட்சம் ஐந்து நீதிபதிகள் கொண்ட அர சியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படும். அக்டோபர் 30 முதல் இந்த வழக்கு விசாரிக்கப்படும்” என்று டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார்.