இந்தியாவில் 19 மாநிலங்களில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 13 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயிகள் சாகுபடி செய்து வரு கின்றனர். கடந்த இரண்டு ஆண்டு காலமாக தேங்காய் 50 சதவீதம் விலை வீழ்ச்சியடைந்துள் ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். தென்னை விவசாயிகள் கடும் பாதிப்பு 2022-23-இல் தமிழ்நாடு அரசு ரோபட் மூலம் 50 ஆயிரம் மெட்ரிக்டன் கொப்பரை கொள்முதல் செய்தது. 2023-24 ஆம் ஆண்டுக்கான கொள்முதல் இதுவரை துவக்கப்படாமலேயே உள்ளது. இதனால் விலை வீழ்ச்சி ஏற்பட்டு விவசாயிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தமிழ்நாட்டில் கொப்பரை கொள்முதலை உடனே துவக்கிட வேண்டும். ஒரு கிலோ ரூ.140 விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய வேண்டும். ஒன்றிய அரசின் தோட்டக் கலைத்துறை மூலம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், உரித்த தேங்காய் கிலோ ரூ.29.30-க்கு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்யலாம் என பரிந்துரை செய்துள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் தேங்காய் விலை ரூ.40-க்கு விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்னை பயிர் செய்துள்ள மாவட்டங்களில் கடுமையான வறட்சி நிலவுவதால், தென்னை மரங்கள் காய்ப்பு திறன் இழந்து வருகிறது. பெரும் பாதிப்பை உருவாக்கும் நிலை ஏற்பட்டு வரு கிறது. எனவே தென்னை பயிர் காப்பீடு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் எளிமையான முறை யில் பதிவு செய்திட அரசு உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு இழப்பீட்டு தொகைரூ.10 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். தென்னை சார்ந்த தொழிலான நார் தொழிற்சாலைகள் முடங்கும் அளவுக்கு உள்ளது. குறைந்தபட்சம் மின் கட்டணம் ரூ. 18 ஆயிரம் என்பதை ரத்து செய்து பயன்பாட்டிற்கான மீட்டர் ரீடிங் கட்டணம் வசூலிக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு உரிக்காய் மட்டைக்கு உரிய விலை கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும். ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கிடுக! தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் முதல் கட்டமாக ரேசன் கடை மூலம் தேங்காய் எண்ணெய் மானியத்தில் விநியோகம் செய்வதாக தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது. எனினும் தற்போது வரை நடைபெறவில்லை. எனவே அனைத்து மாவட்டங்களிலும் தேங்காய் எண்ணெய் மானியத்தில் வழங்கிடவும் பள்ளி கல்லூரிகளிலும், விடுதிகளிலும் பயன்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திட வேண்டும்.