புதுதில்லி, ஜூன் 12 - ரெப்போ விகித அதிகரிப்பைத் தொடர்ந்து, வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக, ரிசா்வ் வங்கி கடந்த புதன் கிழமையன்று வெளியிட்ட நிதிக் கொள்கையில், குறுகிய கால அடிப் படையில் வங்கிகளுக்கு வழங்கும் கடன் களுக்கான வட்டி (ரெப்போ) விகி தத்தை 0.50 சதவிகிதம் அதிகரித்தது. இது உடனடியாக அமலுக்கு வருவ தாகவும் தெரிவித்தது. ரிசா்வ் வங்கி, கடந்த மே மாதத்தில் ரெப்போ வட்டி விகிதத்தை 0.40 சத விகிதம் உயர்த்தியிருந்த நிலையில், இரண்டாவது முறையாக ரெப்போ விகி தம் உயர்த்தப்பட்டதால், ஒட்டுமொத்த மாக ரெப்போ விகிதமானது 4.90 சத விகிதத்தை தொட்டது. இதன்மூலம் தனி நபர் கடன், வாகனக் கடன், வீட்டுக் கடன் உள்ளிட்ட அனைத்துக் கடன்களுக்கான வட்டி விகிதமும் அதிகரிக்கும். இஎம்ஐ தவணைக் கட்டணம் உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே வங்கிகள், ஐசிஐசிஐ வங்கி, பாங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேசனல் வங்கி, பாங்க் ஆப் இந்தியா, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உள்ளிட்டவை ரெப்போவுடன் தொடா்புடைய (Repo Linked Lending Rate -RLLR) கடனுக்கான வட்டியை உயர்த்தியுள்ளன. பஞ்சாப் நேசனல் வங்கி, ரெப்போ வுடன் தொடர்புடைய (Repo Linked Lending Rate -RLLR) கடனுக்கான வட்டியை 6.90 சதவிகிதத்திலிருந்து
7.40 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. மூன்றாவது பெரிய பொதுத்துறை வங்கியான பாங்க் ஆப் பரோடாவும் ஆர்எல்எல்ஆர் விகிதத்தை 7.40 சத விகிதமாக உயர்த்தியுள்ளது. எச்டிஎப்சி நிறுவனம், வீட்டு கடனுக்கான வட்டியை 0.50 சத விகிதம் அதிகரித்துள்ளது. இது, ஜூன் 10-ஆம் தேதியிலிருந்து அமலுக்கும் வந்துள்ளது. இதனால் 20-ஆண்டு கடனுக்கு ரூ. 1 லட்சத்துக்கு கூடுதலாக ரூ.31 செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. எச்டிஎப்சி வங்கி, அதன் வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு முன்பு 6.7 சதவிகிதத்தில் கடன் கொடுத்து வந்தது. ஐசிஐசிஐ வங்கியானது ஜூன் 8 முதல் அதன் வெளிப்புற அளவுகோல்கள் அடிப்படையிலான இபிஎல்ஆர் (External Benchmark based Lending Rate - EBLR) வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 8.6 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. வணிக வங்கிகள் கடன் வழங்கக்கூடிய குறைந்தபட்ச வட்டி விகிதம் இதுவாகும். பெடரல் வங்கியானது அதன் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகி தத்தை தற்போது 8.55 சதவிகிதத்தி லிருந்து துவங்குகிறது. இதேபோன்று, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டியும் கணிசமாக உயரும் என்பதால் வங்கிகளில் கடன் பெற்ற சாமானிய மக்களின் அன்றாட செலவினங்களில் கடுமையான சுமை ஏற்றப்பட்டுள்ளது.